உலகப்போர் ஆவணங்கள் குடும்பத்திடம் ஒப்படைப்பு

உலகப்போர் ஆவணங்கள் குடும்பத்திடம் ஒப்படைப்பு

2 mins read
88976315-d0e6-4684-ac21-9a6907f276a6
-

கேரொ­சல் இணை­யத்தளத்­தில் பழைய அரிய பொருள்­களை வாங்­கிய சிங்­கப்­பூ­ரர், எட்டு மாதங்­க­ளா­கத் தேடி சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 6,000 கிலோ மீட்­டர் தொலை­வில் வசித்த அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளார்.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் கேரொசல் தளத்­தில் விற்­கப்­படும் பொருள்­களை திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ளர், நூலா­சி­ரி­யர், திரைப்­பட விரி­வு­ரை­யா­ள­ரான வெஸ்லி அருசூ பார்த்­துக் கொண்­டி­ருந்­தார். அப்­போது அரிய ஆவ­ணங்­கள் அடங்­கிய ஒரு தொகுப்பு அவ­ரது கண்­களில் பட்­டது. மொத்த ஆவ­ணங்­க­ளை­யும் அவர் எண்­பது வெள்­ளிக்கு வாங்­கி­னார்.

ஜெர்­மா­னிய நாஜி காலத்­தின் கையே­டு­கள், தபால் தலை­கள், குடும்­பப் புகைப்­ப­டங்­கள் உள்­ளிட்­டவை அவற்­றில் இடம்­பெற்­றி­ருந்­தன.

1922, 1924 ஆம் ஆண்­டில் அடுத்­த­டுத்த பிறந்த ஜெர்­மா­னிய சகோ­த­ரர்­க­ளான வோல்­ட­மர், வோல்­ஃப்காங் ஷெக் ஆகி­யோ­ருக்­குச் சொந்­த­மான ஆவ­ணங்­கள் அவை. உல­கப்­போர் காலத்­தில் அவர்­கள் பணி­யாற்­றி­யது ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஒரு சான்­றி­தழ், 1967ல் வோல்­டி­மார் தனது மனைவி நான்கு மகன்­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் குடி­யே­றி­ய­தைக் காட்­டி­யது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு பேட்டி அளித்த அருசூ, 39, கையேட்­டில் இடம்­பெற்று இருந்த சுவஸ்­திகா முத்­திரை தனது கவ­னத்தை ஈர்த்­த­தாகக் கூறி­னார்.

"இரண்டு ஆட­வர்­கள் வாழ்ந்த வாழ்க்கை குறித்த ஆவ­ணங்­கள் பல தக­வல்­க­ளைக் கொண்­டி­ருந்­தன. எப்­ப­டி­யா­வது ஆவ­ணங்­களை அவர்­க­ளின் குடும்­பத்­தி­டம் சேர்த்­து­விட வேண்­டும் என்ற எண்­ணம் ஏற்­பட்­டது," என்று அவர் தெரி­வித்­தார்.

ஒரு வழி­யாக, கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் குவீன்ஸ்­லாந்து ரயில்வே நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் ஊழி­யர் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றி­ருந்த திரு மைக்­கல் ஷெக் என்­ப­வரை குடும்­பப் பெயர் மூலம் அவர் அடை­யா­ளம் கண்டுபிடித்­தார். இவர், வோல்­டி­மார் ஷெக்­கின் மகன். ரயில்வே நிறு­வ­னம் வழி­யாக அவ­ரு­டன் தொடர்­பு­கொண்டு அருசூ பேசி­னார்.

பின்­னர் மெல்­பர்ன் நக­ரில் அருசூ தனது மனை­வி­யு­டன் திரு ஷீக்கை சந்­தித்து ஆவ­ணங்­களை ஒப்­ப­டைத்­த­னர்.

"எங்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள அருசூ எடுத்த முயற்­சி­கள் எங்­களை வியப்­ப­டைய வைத்­தது. வேறு யாரா­வது இருந்­தால் பழைய ஆவ­ணங்­களை குப்­பை­யில் வீசி­யி­ருப்­பார்­கள்." என்று திரு ஷெக் தெரி­வித்­தார்.