தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறப்பணிக்கு ஒரு மில்லியன் வெள்ளி நிதித் திரட்டு

2 mins read
98cbcd7c-f538-4540-99de-b0ec088eb361
-

கரு­ணா­நிதி துர்கா

போக்­கு­வ­ரத்து அமைச்சு, சிங்­கப்­பூர் சிவில் விமா­னப்­போக்­கு­ வரத்து ஆணையம், நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யம், சிங்­கப்­பூர் கடல்­துறை ஆணை­யம், பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் இணைந்து போக்­கு­வ­ரத்து அமைச்சு குடும்ப தொண்டு திட்­டங்­க­ளின் மூலம் நிதி திரட்­டி­யுள்­ளன.

இத்­திட்­டங்­க­ளின் மூலம் சமூக உண்­டி­ய­லுக்­காக ஈராண்டு கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரில் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­களுக் ­காக ஒரு மில்­லி­யன் வெள்ளி திரட்­டப்­பட்­டுள்­ளது.

2010ல் முதன்­மு­த­லில் அறி­ மு­கப்­ப­டுத்­தப்­பட்ட இத்­திட்­டம் இது­வரை சமூக உண்­டி­ய­லுக்­காக $12 மில்­லி­ய­னுக்­கும் மேல் நிதி திரட்­டி­யுள்­ளது.

ஒவ்வோர் ஆண்­டும் போக்­கு­ வ­ரத்­து அமைச்­சின் ஏற்­பாட்­டில் சமூக உண்­டி­ய­லின் பயனாளி­ க­ளுக்­காக அறப்பணி நட­வ­டிக்­கை­கள் நடத்­தப்­படுகின்றன.

இவ்­வாண்­டு நிகழ்ச்­சி­க­ளின் ஓர் அங்­க­மாக ஏப்­ரல் 28ஆம் தேதி­யன்று ஃபெய் யூவே குடும்ப சேவை­க­ளி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 26 பிள்­ளை­க­ளுக்­காக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணைய மின்னிலக்க சோதனைக் கூடம் சுவா­ர­சி­ய­மான நட­வ­டிக்­கை­களுக்கு ஏற்­பாடு செய்­தது.

இந்­நி­கழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன், நிதி மற்­றும் போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், போக்கு­வ­ரத்து மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சு­க­ளின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங் வருகை புரிந்­தி­ருந்­த­னர்.

ஆறு வயது முதல் 12 வயது வரை­யி­லான இப்­பிள்­ளை­கள் மெய்­நி­கர் விளை­யாட்­டு­கள், சில கதா­பாத்­தி­ரங்­களை மைய­மாகக் கொண்ட விளை­யாட்­டு­கள் என இரு­வழித் தொடர்பு அம்­சமுடைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டனர்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் நாம் கொண்­டி­ருக்க வேண்­டிய பொறுப்­புள்ள நடத்­தை­யின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தும் வகை­யில் இந்­ந­ட­வ­டிக்­கை­கள் அமைந்­தன.

"சமூ­கத்­தில் ஒரு குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தில் போக்­கு­வ­ரத்து அமைச்சு மகிழ்ச்சி கொள்­கிறது. போக்­கு ­வ­ரத்து அமைச்சு தொடர்ந்து சமூக உண்­டி­ய­லுக்­கும் அதன் பய­னா­ளி­க­ளுக்­கும் ஆத­ரவு அளிக்­கும்," என்றார் அமைச்சர்.

"பிற­ரின் வாழ்வை மேம்­ப­டுத்­தும் இந்த பங்­கா­ளித்­து­வம் நீடிக்க வேண்­டும். பல தனி­ந­பர்­கள், சமூ­கத்­தி­ன­ரின் வாழ்வை இத்­திட்­டங்­களும் நட­வ­டிக்­கை­களும் மேம்­ப­டுத்­தி­யுள்­ளன," என்று சமூக உண்­டி­ய­லின் தலை­வ­ரான திரு சியூவ் சுட்­டாட் கூறி­னார்.