7-20 வயது மாணவர்களின் கணக்கில் $300 நிரப்புதல்

7-20 வயது மாணவர்களின் கணக்கில் $300 நிரப்புதல்

1 mins read
5ceb6ea5-9e55-4c8f-90c8-52b494a38ca8
-

ஏழு வயது முதல் 20 வயது வரை­யி­லான 540,000 சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளின் எடு­சேவ் கணக்கு­களில் அல்­லது உயர்­நி­லைக்­குப் பிந்­திய கல்­விக் கணக்­கு­களில் மே மாத இறு­திக்­குள் ஒரு­முறை தொகை­யாக $300 நிரப்­பப்­படும்.

இவ்­வாண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் குறிப்­பி­டப்­பட்ட உத்­த­ர­வா­தத் தொகுப்­புத் திட்ட மேம்­பா­டு­க­ளின் ஒரு பகு­தி­யாக இந்­தப் பணம் நிரப்­பு­தல் இடம்­பெறு­கிறது என்று கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

ஆண்­டு­தோ­றும் அர­சாங்­கம் வழங்­கும் எடு­சேவ் பங்­க­ளிப்­புக்கு மேலாக இந்­தப் பணம் நிரப்­பு­தல் அமை­கிறது என்­றும் இது தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு செரி­வூட்­டும் வகுப்­பு­கள் போன்ற கல்வி தொடர்­பான செல­வு­களை ஈடு­கட்ட குடும்­பங்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ர­வாக அமை­யும் என்­றும் அமைச்சு விளக்­கி­யது.

இந்த ஆண்டு அர­சாங்­கத்­தின் வரு­டாந்­திர பங்­க­ளிப்­பாக, தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரின் எடு­சேவ் கணக்­கிலும் $230 போடப்­படும். உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளின் கணக்­கில் $290 போடப்­படும்.

தகு­தி­யுள்ள மாண­வர்­களின் எடு­சேவ் கணக்­கு­களில் இத்­தொகை தானாக வரவு வைக்­கப்­படும். இதன் தொடர்­பில் பணம் பெறும் மாண­வர்­கள் எது­வும் செய்­யத் தேவை­யில்லை.

பணம் நிரப்பப்பட்டவுடன் மாணவர்­க­ளின் பெற்­றோ­ருக்கு சிங்­பாஸ் செயலி வழி­யாக அல்­லது குறுஞ்­செய்தி வழி­யா­கத் தெரி­விக்­கப்­படும்.