தற்காப்புப் படையின் முன்னாள் தலைவருக்குப் புதிய பதவி

தற்காப்புப் படையின் முன்னாள் தலைவருக்குப் புதிய பதவி

1 mins read
0fdbb42b-e708-4399-abdc-1c73ca0dbbe5
-

தற்­காப்­புப் படை­யின் முன்­னாள் தலை­வர் மெல்­வின் ஓங் (படம்) வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தற்­காப்பு அமைச்­சின் தற்­காப்பு மேம்­பாட்­டுக்­கான நிரந்­த­ரச் செய­லா­ள­ரா­கப் பொறுப்­பேற்­பார் என்று பொதுச் சேவைத் துறை நேற்று தெரி­வித்­தது. அவர் அதே நாளில் தற்­காப்பு அமைச்­சி­லி­ருந்து பதவி ஓய்வு பெறு­வார்.

திரு சான் ஹெங் கீ தற்­போது கவ­னித்­து­வ­ரும் தற்­காப்பு மேம்­பாட்­டுக்­கான நிரந்­த­ரச் செய­லா­ளர் பொறுப்பை திரு ஓங் ஏற்­றுக்­கொள்­வார். திரு சான் தற்­காப்­புக்­கான நிரந்­த­ரச் செய­லா­ளர் பொறுப்­பில் தொடர்ந்து செயல்­ப­டு­வார்.

லெஃப்டி­னண்ட் ஜென­ரல் ஓங், 48, சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை­யின் வெளி­நாட்டு உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்று, 1994ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை­யில் சேர்ந்­தார். அது முதல் தற்­காப்பு அமைச்­சின் பல்­வேறு முக்­கிய பொறுப்பு­களை வகித்த ஜென­ரல் ஓங், ராணு­வப் படைத் தலை­வ­ர், தற்காப்புப் படைத் தலைவர் முதலிய பதவிகளை வகித்­தார்.

2013க்கும் 2014க்கும் இடைப்­பட்ட காலத்­தில் திரு ஓங், தற்­கா­லிகமாக அர­சாங்க சேவைக்கு மாற்­றப்­பட்டு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின்கீழ் இயங்­கும் பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்­பின் துணைத் தலைமை நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்­றார்.