கடந்த நான்கு வாரங்களாக நம் சிங்கையின் மூலை முடுக்கெல்லாம் தமிழ் தென்றல் வீசி கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தமிழ் சிந்தனைகள் இதமான அருவியாய் கொட்டி கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் நம் இளையர்களின் பங்கு மிகச் சிறப்பு. பங்குபெறும் மாணவர்கள், இளையர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழ் முரசும் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில், சிங்கை தெருக்களின் பெயர்களையும், அதன் பழைய கம்பம் பெயரையும் வெளியிட்டு வருகிறது. மிகவும் பயனுள்ள தகவல். அதிலே கியூஆர் குறியீடு வைத்து, அதில் அந்த கம்பத்தைப் பற்றிய சிறு குறிப்புகளையும், பெயர் காரணத்தையும் வைத்தால் இன்னும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
- ஜோதி மாணிக்கவாசகம்

