தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் 120வது பிறந்தநாள் நினைவு போற்றும் கட்டுரை அருமை. இன்றைய இளைய தலைமுறையினர், சிங்கப்பூரில் புதிதாகக் குடியேறிய சிங்கப்பூரர்கள், இங்கு வேலை பார்க்கும் வெளிநாட்டு தமிழ்முரசு வாசகர்கள் யாவருக்கும் பயனுள்ள கட்டுரையாக அமைந்திருந்தது.
நாட்டிற்கும் நமது தாய் மொழிக்கும் தொண்டாற்றிய மூத்த தலைமுறையினரின் பங்களிப்பை எடுத்துக்கூறும் கட்டுரைகள் அவ்வப்போது வெளியிட வேண்டுகிறேன். நன்றி
- வீ. தமிழ்மறையான்

