ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் தொண்டூழியர்கள் சிறப்பிப்பு

ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் தொண்டூழியர்கள் சிறப்பிப்பு

1 mins read
085570f0-6e43-475b-a9e2-f395bdd1134e
-

நோன்புப் பெரு­நா­ளின் மகிமை யைப் பறை­சாற்­றும் வகை­யில் சமூக நல­னிற்­காக பாடு­பட்ட முஸ்­லிம் தொண்­டு­ழி­யர்­க­ளைக் கெள­ர­வித்த ஒன்­று­கூ­டல் நிகழ்ச்சி 'வலி­மை­யான தேசத்­திற்­காக உழைக்­கும் குடி­மக்­கள்' எனும் கருப்­பொ­ரு­ளில் கடந்த 28ஆம் தேதி நடந்தது.

மரினா பே சேண்ட்­சில் நடந்த நிகழ்ச்­சி­யில் 500க்கும் மேற்­பட்ட சமூக தலை­வர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் வெளி­நாட்­டுப் பிர­மு­கர்­கள் பங்கேற்றனர்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், மூத்த அமைச்­ச­ரும் தேசி­யப் பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன் ஆகி­யோர் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாகக் கலந்துகொண்­ட­னர்.

சமூக நல­னிற்­கா­க­வும் முன்­னேற்­றத்­திற்­கா­க­வும் பாடு­பட்ட 31 முஸ்­லிம்­க­ளு­டன் திரு வோங் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளுக்கு பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 நெருக்­கடி கால­கட்­டத்­தி­லும் ஒன்­று­பட்ட சமூ­க­மாக நாம் மீண்­டெ­ழுந்­தது நம் ­வலி­மை­யைக் காட்­டு­கிறது.

"தன்னம்­பிக்கை வாய்ந்த குடும்­பங்­கள் நிறைந்த சமூ­க­மாக நாம் தொடர்ந்து உரு­வெ­டுக்க வேண்­டும்," என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவ காரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மச­கோஸ் ஸுல்கிஃப்லி கூறி­னார்.