கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய வைசாகி மேளா

கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய வைசாகி மேளா

2 mins read
09649797-6e6a-479b-a092-edada7f18eb3
-

அனுஷா செல்­வ­மணி

வைசாகி மேளா சீக்­கி­யர்­க­ளுக்­கி­டையே கலா­சார ரீதி­யா­க­வும் சமய ரீதி­யா­க­வும் ஒரு குறிப்­பிடத்­தக்க பண்­டி­கை­யாக போற்­றப்­ப­டு­கிறது. தமி­ழர்­கள் தைத் திரு­நாளைக் கொண்­டா­டு­வது போல சீக்­கி­யர்­க­ளுக்கு அதே சிறப்பு இந்த அறு­வடை திரு­நாள் கலா­சார வகை­யில் அளிக்­கிறது.

அவ்­வாறு, ஒருங்­கி­ணைந்த சீக்­கிய சமு­தா­ய­மாக அவர்­க­ளுக்­குள் ஒற்­று­மை­யைப் பறை­சாற்­றும் வண்­ணம் அனு­ச­ரிக்­கப்­படும் இந்­தப் பண்­டிகை, கொள்­ளை­நோய் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட சூழ­லில் மூன்­றாண்­டு­களுக்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரில் வாழும் சீக்­கிய சமு­தா­யத்­தி­ன­ரால் விம­ரிசை­யாக கொண்­டா­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் கல்சா சங்­கம் 30க்கும் மேற்­பட்ட சீக்­கிய நிறு­வனங்­க­ளு­ட­னும் இதர நிறு­வ­னங்­க­ளு­ட­னும் கைகோர்த்து நேற்­றும் நேற்று முன்­தி­ன­மும் சங்­கத்­தின் வளா­கத்­தில் நிகழ்ச்­சி­களுக்கு நாள் முழுக்க ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்த்து வெற்­றி­க­ர­மா­கப் போரா­டிய அனை­வ­ரை­யும் பிர­தி­ப­லிக்­கும் விதத்­தில் கொண்­டாட்­டம் 'வலு­வாக ஒன்­று­பட்டு முன்­னோக்கிச் செல்­வோம்' எனும் கருப்­பொ­ரு­ளில் இடம்­பெற்­றது.

1961லிருந்து சிங்­கப்­பூர் கல்சா சங்­கத்­தில் இடம்­பெற்று வரும் இந்­தக் கொண்­டாட்­டம் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக கொள்ளை நோய் கட்­டுப்­பா­டு­க­ளுக்குக் கட்டுப்பட்டு நடந்­தேறியது.

இவ்­வாண்டு பெரி­ய­ள­வில் இரண்டு நாள்க­ளுக்கு நடை­பெற்ற கொண்­டாட்ட நிகழ்­வு­கள் சீக்­கி­யர்­களை மட்­டு­மின்றி பிற இனத்­தைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 3,000 பேரை ஈர்த்­தது.

பண்­டி­கைக் கொண்­டாட்­ட­மாக மட்­டு­மின்றி கொள்­ளை­நோ­யின்போது முக்­கிய பங்­காற்­றிய 50க்கும் மேற்­பட்ட சீக்­கி­யர்­க­ளுக்­கும் பஞ்­சாபி மொழி­யைத் தேசிய அள­வில் தங்­கள் தாய்மொழி­யாக எடுத்து தேர்­வு­களில் சென்­றாண்டு சிறப்புத் தேர்ச்சி கண்ட சீக்­கிய மாண­வர்­க­ளுக்­கும் அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டது.

கொண்­டாட்­டத்­தின் வேறோர் அம்­ச­மாக சிறு­வர்­க­ளுக்­கான விளை­யாட்­டு­கள், போட்­டி­கள், பெண்­க­ளுக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­குமான நட­வ­டிக்­கை­கள், பஞ்­சாபி கவி­தைப் போட்டி, கபடி போட்டி, பண்­பாட்டு நிகழ்ச்­சி­கள், பாங்க்ரா ஆடல் பாடல் ஆகி­யவை இரண்டு நாள்­க­ளுக்கு நடை­பெற்­றன.

சீக்­கிய பாரம்­ப­ரி­யத்­தைத் தழு­வும் வகை­யில் பாரம்­ப­ரியப் பொருள்­கள் விற்­கப்­படும் சாவ­டி­கள் கொண்­டாட்­டத்­திற்கு மேலும் மெருகூட்டின.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை உள்­ள­டக்­கும் வித­மா­க­வும் நேற்று வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நிலை­யத்­தி­லி­ருந்து சீக்­கிய வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிலர் வந்­தி­ருந்­த­னர்.

முதல் நாள் கொண்­டாட்­டத்­தில் கலா­சார, சமூக, இளை­யர் அமைச்­சுக்­கும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சுக்­கும் மூத்த நாடா­ளு­மன்ற செய­லா­ள­ரான எரிக் சுவா கலந்­துகொண்டு சிறப்­பித்­தார்.

"பன்­மு­கத்­தன்மை வளர்ந்­து

­வ­ரும் சமு­தா­யத்­தில் வாழும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் புரிந்­துகொண்டு பிற இன வழக்­கங்­களை அர­வ­ணைத்து ஒன்­று­பட்ட சமூ­க­மாக நிற்க வேண்­டும்," என்று திரு சுவா குறிப்­பிட்­டார்.