தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவார்ந்த மருந்தக நிர்வாகத்தை நாடும் பொதுநல மருத்துவர்கள்

2 mins read
d1eae859-02e7-4660-abf4-9b31a51bad80
-

'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டம் நடைமுறை காணவுள்ளதன் தொடர்பில்

சிங்­கப்­பூ­ரின் பிர­தான பாது­காப்­புப் பரா­ம­ரிப்பு உத்­தி­மு­றை­யா­கக் கரு­தப்­படும் 'மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி' (எச்­எஸ்ஜி) திட்­டம் ஜூலை மாதம் அம­லாக்­கம் காண­வுள்ள நிலை­யில் அதில் அங்­கம் வகிப்­பதில் பொதுநல மருத்­து­வர்­கள் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அமைப்­பு­மு­றை­க­ளு­டன் ஒருங்­கிணைந்த அறி­வார்ந்த மருந்­தக நிர்­வாக அமைப்­பு­ மு­றை­க­ளுக்கு மாறு­வதை அவர்­கள் தங்­க­ளின் அன்­றாட மருந்­த­கச் செயல்­பாடு­களுக்கு உத­வி­யா­கக் கரு­து­கின்­ற­னர். மருத்­து­வப் பரா­ம­ரிப்பு வழங்­கும் பொறுப்பு மருத்­து­வ­மனை­களி­ட­மி­ருந்து சமூ­கத்­திற்கு மாறு­வதை நோக்­க­மா­கக் கொண்­டது இந்த 'எச்­எஸ்ஜி' திட்­டம்.

இந்­நி­லை­யில், நோயா­ளி­களின் பதி­வே­டு­கள், வரி­சை­யில் காத்­தி­ருப்பு, மருந்துக் குறிப்­பு­கள், மருந்து இருப்பு, கட்­ட­ணங்­கள் போன்­ற­வற்றை நிர்­வ­கிக்­கும் மென்­பொ­ரு­ளாக 'சிஎம்­எஸ்' எனப்­படும் மருந்­தக நிர்­வாக அமைப்­பு­முறை உத­வும்.

இது­வரை ஐந்து 'சிஎம்­எஸ்' நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் அமைப்பு­மு­றை­களை 'எச்­எஸ்ஜி'க்குப் பொருந்­தும் வகை­யில் அமைத்து வரு­வ­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன. ஆனால், அது பொருந்­து­வ­தற்கு முத­லில் ஒவ்­வொரு சிஎம்­எஸ்­ஸும் தேசிய மின்­னி­யல் சுகா­தா­ரப் பதி­வே­டு­க­ளு­டன் (என்­இ­எச்­ஆர்) ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்­டும். 'ஒவ்­வொரு நோயா­ளிக்­கும் ஒரே சுகா­தா­ரப் பதி­வேடு' என்ற அமைப்­பு­ முறை, தனி­யார் மருந்­த­கங்­கள், நிபு­ணத்­துவ மருந்­த­கங்­கள், மருத்­து­வ­மனை­கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து நோயா­ளி­யின் பதி­வே­டு­களை ஒன்­று­தி­ரட்­டும் ஆற்­ற­லு­டை­ய­தாக இருக்க வேண்­டும்.

இந்த 'என்­இ­எச்­ஆர்' 2011ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­ட­போ­தும் தனி­யார் துறை இத்­திட்டத்­தில் ஈடு­ப­டு­வ­தில் மும்­மு­ரம் காட்­ட­வில்லை. ரக­சி­யத்­தன்மை தொடர்­பான கவ­லை­களும் எழுந்து வந்­தன. இதற்­கி­டையே 'எச்­எஸ்ஜி' தளத்­து­டன் சிஎம்­எஸ் ஒருங்­கிணைக்­கப்­பட்­டால்­தான் நோயாளி­க­ளைச் சேர்த்­துக்­கொள்­ளு­தல், சுகா­தா­ரத் திட்­டங்­க­ளைப் பதி­வி­டு­தல், கூடு­தல் மருத்­து­வச் சோத­னை­க­ளுக்கு அனுப்­பு­தல், அர­சாங்­கத்­தி­டம் தர­வு­க­ளைச் சமர்ப்­பித்­தல் போன்ற பல்­வேறு பணி­க­ளுக்­காக மருத்­து­வர்­கள் அமைப்­பு­ மு­றை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யும்.

'சாஸ்' எனப்­படும் சமூக சுகா­தார உத­வித் திட்­டத்­து­டன் 'சிஎம்­எஸ்' இணைக்­கப்­ப­டு­வது அவ­சி­யம் என்­ப­து­டன் இணை­யப் பாது­காப்பு நிபந்­த­னை­களும் நிறை­வேற்­றப்­ப­ட­ வேண்­டும்.

ஏறத்­தாழ 800 தனி­யார் மருந்­த­கங்­கள் எச்­எஸ்ஜி திட்­டத்­தின்­கீழ் இணைந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தி­ருந்­தார். சிங்­கப்­பூ­ரில் 1,600க்கும் மேற்­பட்ட பொதுநல மருந்­த­கங்­கள் உள்­ளன. இதற்­கிடையே, மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தில் பலன்­கள் உள்­ளன என ஒரு­சில மருத்­து­வர்­கள் கரு­தி­னா­லும் புதிய அமைப்­பு­ முறை­யால் நிர்­வா­கப் பணி­களும் சிக்­கல்களும் அதி­க­ரிக்­கும் என்­கின்­ற­னர் வேறு சிலர்.