தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழாக்கால உணர்வுடன் உணவு விநியோகம்

1 mins read
adae8d83-d048-4373-aa6b-848a067f9cab
-

ஏப்­ரல் மாத விழாக்­கா­லத்­தின் கொண்­டாட்ட உணர்வை மேலும் தொடர, ஒரு பெரிய அள­வி­லான உணவு விநி­யோ­க முயற்சி இரு அமைப்­பு­களால் நேற்று முன்­தி­னம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­ தொண்­டூ­ழி­யர்­க­ளின் கடும் உழைப்­பால், சுவை­மிகு சைவ பிரி­யாணி, 'தவ்வு சம்­பால்', கிழங்­குப் பொறி­யல் ஆகி­யவை சமைக்­கப்­பட்டு, அவை 2,100 உண­வுப் பொட்­ட­லங்­களில் வைக்­கப்­பட்­டன.

அந்த உண­வுப் பொட்­ட­லங்­கள் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு நேற்று முன்­தி­னம் அவர்­க­ளின் வீட்­டுக்கே சென்று விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

சித்­தி­ரைப் புத்­தாண்டு கொண்­டாட்ட உணர்­வை­யும் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் அந்த உண­வுப் பொட்­ட­லங்­க­ளு­டன் இனிப்­புப் பதார்த்­தங்­களும் முறுக்கு வகை­களும் கொடுக்­கப்­பட்­டன.

30க்கு மேற்­பட்ட சமூக மன்­றங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் கழக நற்­ப­ணிப் பேர­வை­யின் சுமார் 100 தொண்­டூ­ழி­யர்­கள் சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள வசதி குறைந்த வீடு­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­களை விநி­யோ­கம் செய்ய பெரி­தும் உத­வி­னர் என்று தெரிவிக்கப்பட்டது.