சிங்கப்பூரின் பாதுகாப்பை அலட்சியப்படுத்த இயலாது

சிங்கப்பூரின் பாதுகாப்பை அலட்சியப்படுத்த இயலாது

2 mins read
76732e31-9097-4a4a-8c5d-f6153daf829d
-

பயங்கரவாத, தீவிரவாத அச்சுறுத்தல்கள் இன்னும் நீங்கவில்லை: பிரதமர் லீ

பயங்­க­ர­வா­தம், தீவி­ர­வா­தம் தொடர்­பான அச்­சு­றுத்­தல்­கள் இன்­னும் நீங்­க­வில்லை. அவை தொடர்ந்து உரு­மா­றி­ய­ப­டியே உள்­ள­தால் சிங்­கப்­பூர் அதன் பாது­காப்பை மெத்­த­ன­மா­கக் கருத இய­லாது என்று பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார்.

ஈரா­னி­லும் சிரி­யா­வி­லும் 'ஐஎஸ்' பயங்­க­ர­வாத அமைப்பு, அல்­க­யீதா, ஜமா இஸ்­லா­மியா போன்­றவை தொடர்ந்து இயங்கி வரு­கின்­றன. உல­கெங்­கும் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்­குச் சில­ரைத் தூண்­டி­வி­டும் ஆற்­றல் அவற்­றுக்கு உள்­ளது என்­ப­தைப் பிர­த­மர் சுட்­டி­னார்.

சமய மறு­வாழ்வு அமைப்­பின் (ஆர்­ஆர்ஜி) 'மாஜுலா' காட்­சிக் கூடத் திறப்பு நிகழ்ச்­சி­யில் நேற்று அவர் உரை­யாற்­றி­னார்.

பயங்­க­ர­வா­தக் குழுக்­க­ளின் இலக்­குப் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் தொடர்ந்து இடம்­பெ­று­வ­தைக் குறிப்­பிட்ட திரு லீ, அண்­மைய ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரில் சுய­மா­கவே தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தின்­பால் ஈர்க்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தைச் சுட்­டி­னார்.

2015ஆம் ஆண்­டுக்­குப் பிறகு அத்­த­கைய 49 பேர் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் விசா­ரிக்­கப்­பட்­ட­னர். அவர்­களில் 37 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள். பெண்­களும் இளை­யர்­களும் அவர்­களில் அடங்­கு­வர் என்­றார் திரு லீ.

அனை­வ­ரும் விழிப்­பு­டன் இருப்­பதே பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான வலு­வான தற்­காப்பு என்று கூறிய அவர், இன, சமய நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்த வேண்­டும் என்­றார்.

பயங்­க­ர­வா­தம், தீவி­ர­வா­தம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான போரில் 'ஆர்­ஆர்ஜி' கடந்த 20 ஆண்­டு­க­ளாக வழங்­கி­வ­ரும் பங்­க­ளிப்­பிற்­குப் பிர­த­மர் பாராட்டு தெரி­வித்­தார். அவ்­வ­மைப்­பின் சம­யக் கல்­வி­மான்­கள் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு சமய மறு­வாழ்வு ஆலோ­சனை வழங்க முன்­வந்­ததை அவர் குறிப்­பிட்­டார். 2001ல் ஜமா இஸ்­லா­மியா அமைப்­பின் தாக்­கு­தல் சதித் திட்­டங்­கள் முறி­ய­டிக்­கப்­பட்ட பிறகு, உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை­யு­டன் இணைந்து அவர்­கள் செயல்­பட்­ட­னர்.

மார்ச் மாதம் கால­மான உஸ்­தாத் அலி­யின் வழி­காட்­டு­த­லில் அக்­கல்­வி­மான்­கள் துணிச்­ச­லு­டன் செயல்­பட்­ட­தைக் குறிப்­பிட்ட பிர­த­மர் உஸ்­தாத் அலிக்­குத் தமது உரை­யில் புக­ழஞ்­சலி செலுத்­தி­னார்.

'ஆர்­ஆர்ஜி' அமைப்பு நேற்று அதன் 30ஆம் ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டி­யது.