புக்கிட் பாஞ்சாங்கில் காட்டுப் பன்றியால் தாக்கப்பட்ட விலங்குப் பிரியர்

புக்கிட் பாஞ்சாங்கில் காட்டுப் பன்றியால் தாக்கப்பட்ட விலங்குப் பிரியர்

2 mins read
8db7b133-75dd-4f1d-bfab-2c22616e74b3
-

வீட்­டுக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கும்­போது, ஒரு காட்­டுப் பன்றி தன்­னைத் தாக்­கும்­போது, 34 வயது துர்­கா­தே­விக்­குப் பயம் ஏற்­ப­ட­வில்லை. மாறாக, மனி­த­ரைத் தாக்­கி­விட்­டது என்று அறிந்­தால் அது கொல்­லப்­பட்­டு­வி­டும் எனும் கவ­லை­தான் அவ­ருக்­குள் ஏற்­பட்­டது.

மே 1ஆம் தேதி நள்­ளி­ரவு வேளை­யில் புக்­கிட் பாஞ்­சாங் குளோஸ் பேருந்து நிறுத்­து­ம்­இடத்­தில் தான் இறங்­கி­ய­போது, தன்னை அந்­தக் காட்­டுப் பன்றி நான்கு முறை தாக்­கி­ய­தால் அவர் சாலை­யில் போய் விழுந்­தார்.

அந்­தச் சம­யத்­தில் அவ்­வ­ழி­யாக மெது­வோட்­டத்­தில் ஈடு­பட்ட ஒரு­வ­ர் தமது அக்காவுக்கு உதவி செய்தார் என்று துர்­கா­தேவி­யின் தங்கை ஸ்ரீதேவி, 29, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

வலது கால், பிட்­டம், கை ஆகிய இடங்­களில் பல காயங்­க­ளுக்கு உள்­ளான, விலங்­குப் பிரி­ய­ரான தம் அக்கா, அந்­தக் காட்­டுப் பன்றி கரு­ணைக்­கொலை செய்­யப்­பட்டு விடுமே என்­று­தான் கவ­லைப்­பட்­டார் என்­றார் ஸ்ரீதேவி.

"நல்­ல­வே­ளை­யாக தாக்­கப்­பட்­டது நானாக இருந்­தேன். ஒரு பிள்ளை, பாதிப்­ப­டை­யக்­கூ­டிய ஒரு­வர் என்று வேறு யாராக இருந்­தி­ருந்­தால், விளைவு இன்­னும் மோச­மாக இருந்­தி­ருக்­கும்," என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தில் நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றும் துர்­கா­தேவி சொன்­னார்.

பங்­கிட் ரோடு, புளோக் 270க்கு அருகே உதவி தேவைப்­படு­வ­தாக மே 1ஆம் தேதி இரவு 11.50 மணிக்­குத் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­தது என்று தெரி­வித்­தது. சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, துர்­கா­தே­வியை டான் டோக் செங் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு சென்­றது.

இச்­சம்­ப­வம் பற்றி தங்­க­ளுக்கு செவ்­வாய்க்­கி­ழமை காலை­யில் தக­வல் கிடைத்­த­தி­லி­ருந்து தாங்­கள் அந்­தக் குடும்­பத்­து­டன் தொடர்­பில் இருந்­து­வ­ரு­கி­றோம் என்று தேசிய பூங்­காக் கழ­கம் கூறி­யது.

தாக்­கு­தல் நடந்த சாலை­யோ­ரத்­தில் அந்­தக் காட்­டுப் பன்றி விழுந்து கிடந்­ததை தேசிய பூங்­காக் கழக அதி­கா­ரி­கள் கண்­ட­னர். அதன் பின்­னங்­கால்­கள் உடைந்­தி­ருந்­தன. பின்­னர் அது மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் கரு­ணைக்­கொ­லைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டது என்று வன­விலங்கு மருத்­து­வர் கூறி­னார்.

காயங்­கள் கார­ண­மாக தம் அக்­கா­வுக்கு நான்கு அறுவை சிகிச்­சை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்று கூறிய ஸ்ரீதேவி, வலது கையில் நரம்பு சிதைந்­தி­ருந்­தது, பின்­னங்­கா­லில் ஆழ­மான வெட்­டு­கள் இருந்­தன என்­றும் தாம் பார்த்­த­வற்­றில் இது­தான் ஆக மோச­மான காட்­டுப் பன்றி தாக்­கு­தல் என்று மருத்­து­வர் கூறி­ய­தா­க­வும் விவரித்தார்.

இவ்­வாண்­டில் நிகழ்ந்­தி­ருக்­கும் இரண்­டா­வது காட்­டுப் பன்றி தாக்­கு­தல் இது என்­றும் நான்கு ஆண்­டு­களில் 28வது சம்­ப­வம் என்­றும் பூங்­காக் கழ­கம் தெரி வித்­தது.

தக­வல் கிடைத்­த­வு­டன் தாம் துர்­கா­தே­வி­யின் வீட்­டுக்­கு புதன்­கி­ழமை இரவு சென்­ற­தா­கக் கூறிய புக்­கிட் பாஞ்­சாங் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியாங் எங் ஹுவா, அவ­ருக்­குத் தேவை­யான உத­வி­கள் வழங்­கப்­படும் என்­றார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு பூங்­காக் கழ­கம் தனது நட­வ­டிக்கைகளை மறு­ஆய்வு செய்து குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.