இணையத்தள ஆசிரியருக்கு தண்டனை குறைப்பு

இணையத்தள ஆசிரியருக்கு தண்டனை குறைப்பு

2 mins read
5c62eae8-2d48-4953-840d-f34e64eddaa0
-

மேல்­மு­றை­யீட்­டைத் தொடர்ந்து 'தி ஆன்­லைன் சிட்­டி­சன்' (டிஓசி) இணை­யத்­த­ளத்­தின் தலைமை ஆசி­ரி­யருக்கும் பங்­க­ளிப்­பா­ள­ருக்­கும் தண்­டனை குறைக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களை அவ­தூ­றா­கப் பேசி­ய­தற்­காக 2022ல் அவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தலா மூன்று வாரச் சிறைத்­தண்­ட­னையை உயர் நீதி­மன்­றம் நேற்று அபரா­த­மா­கக் குறைத்­தது.

நீதிபதி ஐடிட் அப்துல்லா குற்றவியல் அவதூறுக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றாலும் மூன்று வார சிறை மிகவும் அதிகம் எனக் குறிப்பிட்டார்.

டேனி­யல் டி கோஸ்டா அகஸ்­டி­னுக்கு சிறைக்­குப் பதி­லாக $10,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது, ஆசி­ரி­யர் டெர்ரி சூவுக்கு $8,000 அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

டி கோஸ்டா, 2018 செப்­டம்­பர் 4 அன்று தனது நண்­ப­ரான திரு சிம் வீ லீயின் மின்­னஞ்­சல் கணக்­கி­லி­ருந்து 'டிஓசி'க்கு "பிஏபி எம்பி மன்­னிப்­புக் கோரு­கி­றார்" என்ற தலைப்­பில் கடி­தம் எழு­தி­யி­ருந்­தார். அவர் அதில் 'வில்லி சிம்' என்று கையெ­ழுத்­திட்­டி­ருந்­தார். சில நேரங்­களில் திரு சிம் பயன்­படுத்­தும் பெயர் அது. அதே நாளில், 'டிஓசி' இணை­ய­த­ளத்­தில் 'அதி­க­பட்ச ஊழல்' என்ற சொற்­றொ­ட­ரைக் கொண்ட அக்கடி­தத்தை சூ வெளி­யிட்­டார்.

அந்­தக் கடி­தம், முன்­னாள் அர­சி­யல் கைதி­யான தியோ சோ லங்கை சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யு­டன் இணைத்­துப் பேசி­ய­தற்­காக மக்­கள் செயல் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சீ கியான் பெங் மன்­னிப்­புக்­கோ­ரி­யது தொடர்­பா­னது என ஒரு ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2018 செப்டம்பர் 18ஆம் தேதி அன்று, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) சூவை அறிவுறுத்தி யதையடுத்து அக்கடிதம் இணையத்திலிருந்து அகற்றப்பட்டது.

நவம்பர் 2021ல் மாவட்ட நீதிபதியால் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப் பளிக்கப்பட்டு 2022 ஏப்ரலில் தண்டனை விதிக்கப்பட்டது.