தாய்லாந்தில் நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டங்களின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிக்க இன்னொரு சிங்கப்பூரருடன் இணைந்து குறைந்தது 3,000 அமெரிக்க டாலர் (S$3,975) லஞ்சம் தந்ததாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
இரண்டு நிறுவனங்களுக்கு உரிமையாளராக இருந்த 30 வயது போ வெய் ஹாவ் மீது நேற்று நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
32 வயது குவா வெய் குவானுடன் இணைந்து இக்குற்றங்களை போ புரிந்ததாகக் கூறப்படுகிறது.
குவா மீது கடந்த மாதம் 14 குற்றச்சாட்டுகள் பதிவாகின. தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கூடைப்பந்து ஆட்டங்களின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிக்க இவர் ஏறத்தாழ $70,000 லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
இவர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

