தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறகுடைந்த ஆந்தை கருணைக் கொலை

1 mins read
efb5a833-aab9-4ea1-92d4-f7da8724e5cd
-

சிற­கு­டைந்து கடும் துன்­பத்­துக்கு உள்­ளான ஆந்தை கரு­ணைக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. நேற்று முன்­தி­னம் தானா மேரா கோஸ்ட் சாலை­யில் மிக­வும் மோச­மான நிலை­யில் இருந்த அந்த ஆந்­தையை அவ்­வ­ழி­யா­கச் சென்­று­கொண்­டி­ருந்த வழிப்­போக்­கர் ஒரு­வர் கண்­டார்.

அந்த ஆந்தை வன­விலங்கு மறு­வாழ்­வுக்­கான தேசிய பூங்கா மையத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­க­வும் அதற்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் தேசிய பூங்­காக் கழ­கத்­தின் வன­வி­லங்கு நிர்­வா­கக் குழு­வின் இயக்­கு­நர் ஏட்­ரி­யன் லூ கூறி­னார்.

ஆந்­தை­யின் சிறகுப் பகுதியில் பல எலும்பு முறிவுகள் ஏற்­பட்­டி­ருந்­த­தா­க­­வும் அது கவ­லைக்­கி­ட­மாக இருந்­த­தா­க­வும் குண­ம­டை­யும் வாய்ப்­பு­கள் மிக­வும் குறைவு என்­றும் டாக்­டர் லூ தெரி­வித்­தார். எனவே, அது கரு­ணைக் கொலை செய்­யப்­பட்­ட­தாக அவர் கூறி­னார். காய­ம­டைந்த ஆந்­தை­க­ளைப் பார்த்­தால் அதை அவ்­வி­டத்­தி­லி­ருந்து நகர்த்­தா­மல் உட­ன­டி­யாக தேசிய பூங்­காக் கழ­கத்­தின் விலங்கு உதவி மையத்­து­டன் தொடர்­பு­கொள்­ளும்­படி அவர் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.