கொவிட்: மருத்துவமனையில் சேர்வோர் இன்னமும் அதிகம்

2 mins read
494ca801-c3e9-4fe8-b68e-32df1d953158
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் சேரும் மக்­க­ளின் எண்­ணிக்கை மார்ச் 5ஆம் தேதி முதல் எட்டு வார கால­மா­கவே அதி­க­ரித்து வந்து உள்ளது.

கடந்த ஏப்­ரல் 23ஆம் தேதிக்­கும் 29ஆம் தேதிக்­கும் இடை­யில் 568 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். 15 பேர் தீவிர கண்­கா­ணிப்­புப் பிரி­வுக்கு அனுப்­பப்­பட்­ட­னர்.

ஏப்­ரல் 2ஆம் தேதிக்­கும் 29ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட நான்கு வார காலத்­தில் 47 நோயா­ளி­கள் தீவிர கண்­கா­ணிப்­புப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இந்த எண்­ணிக்கை, இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் 43ஆக இருந்­தது. ஏப்­ரல் மாதக் கடைசி வாரத்­தில் சரா­சரி­யாக ஒருநாளில் கொவிட்-19 நோயா­ளி­கள் 317 மருத்­து­வ­மனை படுக்­கை­களில் சேர்ந்­த­தாக சுகா­தார அமைச்சு தெரி­விக்­கிறது.

மார்ச் மாதத்­தின் கடைசி வாரத்­தில் சரா­ச­ரி­யாக அவர்­கள் 180 படுக்­கை­களை எடுத்­துக்­கொண்­ட­னர். அதே வாரத்­தில் 22,651 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

அந்த எண்­ணிக்கை, முந்­தைய வாரத்­தை­விட 20 விழுக்­காட்டுக்­கும் குறைவு என்­றா­லும் ஒப்­பிட்டுப் பார்க்­கை­யில் அது இன்­ன­மும் அதி­க­மா­கவே இருக்­கிறது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லானோர் கடு­மை­யான பாதிப்­புக்கு ஆளா­க­வில்லை என்று குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் 30 பேர் மர­ணம் அடைந்து இருக்­கி­றார்­கள். அவர்­களில் இரண்டு பேருக்கு வயது 60க்கும் கீழ்.

சளிக்­காய்ச்­சல் நோய் காரணமாக ஏற்­ப­டக்­கூ­டிய மரண எண்­ணிக்­கை­யை­விட இந்த எண்­ணிக்கை குறை­வாக இருக்­கக்­கூடிய வாய்ப்பு இருக்­கிறது.

கொவிட்-19க்கு முன்பு சளிக்­காய்ச்­சல் கார­ண­மாக ஒவ்­வொரு மாத­மும் சுமார் 50 பேர் மர­ண­மடைந்­த­னர். கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­த­தால் பலதுறை மருந்­தக நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் கூடி­யது.

ஏப்­ரல் மாத முதல் மூன்று வாரங்­களில் நாள் ஒன்­றுக்கு 3,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பல­துறை மருந்­தக சிகிச்­சையை நாடி­னர்.

இந்த எண்­ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலத்­து­டன் ஒப்பிடு­கை­யில் இரண்டு மடங்­கிற்­கும் அதி­கம்.