தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2050ல் கரிமக்கழிவற்ற நிலை: தெமாசெக் கல்லூரி திட்டம்

1 mins read
adaa316b-643f-4409-9089-5a06c84cad00
-

தெமா­செக் பல­துறைத் தொழிற்­கல்­லூரி கரி­மக் கழி­வற்ற நிலை­யைச் சாதிக்­கத் தோதாக வழி­காட்டி உத்தி ஒன்றை அனைத்­து­லக அள­வில் அங்­கீ­கரிக்­கப்பட்டுள்ள தரங்­க­ளுக்கு ஏற்ப உரு­வாக்க திட்­ட­மி­டு­கிறது.

கரி­மக்­ க­ழி­வற்ற நிலையைச் சாதிக்க சிங்­கப்­பூர் நிர்­ண­யித்­துள்ள 2030 இலக்கை எட்ட பள்­ளிக்­கூ­டங்­கள் ஆயத்­த­மாகி வ­ரும் வேளை­யில் தெமா­செக் அந்த உத்­தி­யைக் கையில் எடுக்­கிறது.

சிங்­கப்­பூ­ரின் இலக்கு­களை ஒட்டி, 2030ஆம் ஆண்­டுக்­கும் அதற்கு அப்­பாற்­பட்ட காலத்­திற்­கும் உரிய சுற்றுச்­சூழல் இலக்கு­க­ளைத் தீர்­மா­னிக்­க­வும் 2050ல் கரி­மக்­கழி­வற்ற நிலை­யைச் சாதிப்­பது பற்­றி­யும் கல்­லூரி ஆராய்ந்து வரு­வ­தாக அதன் நீடித்த நிலைத்தன்மை துறைத் தலை­வர் வாலஸ் லிம் தெரி­வித்­தார்.

கல்­லூ­ரி­யின் இப்­போ­தைய தண்­ணீர், எரி­சக்­திப் பய­னீடு, கழிவு­கள், நேர­டி­யாக, மறை­மு­க­மாக கல்­லூரி வெளி­யாக்­கும் கரிம அளவு ஆகி­ய­வற்றை அள­விட ஆலோ­சனை நிறு­வ­னம் ஒன்றை கல்­லூரி நிய­மிக்­கும்.

இந்தத் திட்­டத்­தில் ஊழி­யர்­களும் மாண­வர்­களும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்று அர­சாங்­கத்­தின் ஜிபிஸ் என்ற இணைய வாச­லில் வெளி­யான ஒப்­பந்­தப் புள்ளி ஆவ­ணங்­கள் மூலம் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.