புக்கிட் பாஞ்சாங் ரோட்டில் ஒரு பேருந்து நிறுத்தத்துக்கு அருகே ஒரு காரில் திங்கட்கிழமை மாலை தீப்பிடித்துக்கொண்டது. டெலிகிராம் குழுமத்தில் பகிரப்பட்ட படங்கள், காணொளி
கள் மூலம் செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றத்துக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது என்று தெரியவந்தது. காரிலிருந்து வெளியான கரும்புகையைத் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 'ரெட் ரைனோ' எனும் இலகுரக தீத்தடுப்பு வாகனம், ஒரு தீயணைப்பு வாகனம், இரு காவல்துறை வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன.
சம்பவம் பற்றி மாலை 6 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்தது என்றும் நீரைப் பீய்ச்சியடிக்கும் சாதனம், காற்று நுரை ஆகியவற்றைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை.

