கலைப் பல்கலைக்கழக மாணவருக்குப் புதிய பொதுப் பாடத்திட்டம்

1 mins read
f6f8cfa3-9a0f-4181-b175-afeb549fc148
-

புதிய சிங்­கப்­பூர் கலை­ப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் 2024ல் சேரும் மாண­வர்­கள் குறைந்­த­பட்­சம் ஒரு நேர­டிப் பயிற்சி செயல் திட்டத்திலாவது கலந்­து­கொள்ள வேண்­டும். அவர்­களைப் பரந்த உல­கில் வேலை பார்க்­கும் அளவிற்கு ஆயத்­த­மாக்­கும் கல்­விப் பாடங்­களை அவர்­கள் படித்து முடிக்க வேண்­டும்.

ஒரு பொது­வான பாடத்­திட்­டத்­தின் அங்­க­மாக இருக்­கக்­கூ­டிய பயிற்சிப் படிப்­பு­க­ளை­யும் அவர்­கள் மேற்­கொள்ள வேண்டி இருக்­கும் என்று அந்­தப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் துணை வேந்­தர் குவாக் கியான் வூன், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தார்.

தக­வல் தொடர்பு, மின்னிலக்கக் கல்வி, சமூ­கப் பிரச்­சி­னை­கள் போன்ற படிப்பு ­கள் அவற்­றில் உள்­ள­டங்­கும்.

அந்­தப் புதிய பல்­க­லைக்­க­ழகம் கலை­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது பல்­க­லைக்­க­ழ­க­மா­கும்.

அது அடுத்த ஆண்­டில் இள­நிலை பட்­டப்படிப்பு, முது­நிலை கலை பட்­டப்படிப்­பு­களில் 700க்கும் மேற்­பட்ட மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்கொள்­ளும்.

அது தனது சின்னத்தை நேற்று வெளி­யிட்­டது.