குடியிருப்புச் சொத்து வாங்காத குடும்ப அலுவலகங்கள்

2 mins read
ea53eed5-2eb5-4f06-aed2-a2e8a28b7250
-

பெரும் செல்­வந்­தர்­க­ளின் முத­லீ­டு­களை நிர்­வ­கிக்­கின்ற குடும்ப அலு­வ­ல­கங்­கள், கடந்த ஆறு ஆண்டு காலத்­தில் ஒரு குடி­யி­ருப்­புச் சொத்­தைக்கூட வாங்­க­வில்லை என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் கூறி­னார்.

ஆகை­யால், குடும்ப அலு­வ­ல­கங்­க­ளால் சிங்­கப்­பூ­ரின் தனி­யார் வீட்­டுச் சந்­தை­யில் எந்­த­வொரு தாக்­க­மும் இல்லை என்று நாடா­ளு­மன்­றத்­தில் அவர் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்­டுக்­கா­ரர்­கள் வாங்­கிய தனி­யார் குடி­யி­ருப்புச் சொத்­து­க­ளின் அளவு கடந்த 10 ஆண்­டு­களில் குறைந்துள்ளது.

2021ல் 20 விழுக்­கா­டாக இருந்த அந்த அளவு, கடந்த சில ஆண்­டு­களில் சுமார் 3% முதல் 4% ஆக இறங்கி இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொற்­றில் இருந்து விடு­பட்டு இருக்­கும் சூழ­லில் அந்த விகி­தம் இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் சுமார் 7% ஆக இருந்து வரு­கிறது என்­றா­ர­வர்.

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்­டில் தனி­யார் வீடு­க­ளின் விலை­யும் வாட­கை­யும் மிக­வும் அதி­கரித்து இருந்தன.

வெளி­நாட்டுக் கொள்­மு­தல்­கா­ரர்­க­ளின் விகி­தம் சென்ற ஆண்­டின் முதல் காலாண்­டில் 3.1% ஆக இருந்­தது. இது இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் 6.9% ஆக அதி­க­ரித்து இருக்­கிறது என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணைய புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் 2021ஆம் ஆண்டு முடிவுவாக்­கில் 700 தனிக் குடும்ப அலு­வ­ல­கங்­கள் செயல்­பட்­டன என்­பது சிங்­கப்பூர் நாணய ஆணை­யம் மூலம் தெரி­ய­வ­ரு­கிறது.

அவற்­றில் சுமார் 200 அலு­வ­ல­கங்­கள், உள்­ளூர் சொத்­து­களில் முத­லீடு செய்­வ­தற்கு ஏது­வாக சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் வரி ஊக்­கு­விப்­பு­கள் கேட்டு விண்­ணப்­பித்து இருக்­கின்­றன.