சவால்களை எதிர்கொள்ள கூடுதல் துணிவு தேவை

சவால்களை எதிர்கொள்ள கூடுதல் துணிவு தேவை

2 mins read
6ba9e425-1a1f-4999-bfa9-eb43dd0aadbb
-

அனைத்­து­லக அள­வில் சவால் விடுக்­கும் பரு­வ­நிலை மாற்­றம் விவ­கா­ரம் போலவே மக்­கள்­தொகை­யில் ஏற்­படும் மாற்­ற­மும் முக்­கி­ய­மா­கக் கரு­தப்­ப­ட­வேண்­டும். அத்­து­டன் தொடர்­பு­க­ளைக் கண்­ட­றி­வ­தி­லும் தீர்­வு­களை முன்­வைப்­ப­தி­லும் கூடு­தல் துணி­வுடன் கல்­வி­யா­ளர்­கள் செயல்­ப­ட­வேண்­டும் என்­றார் வர்த்­த­கர் ஹோ குவோன் பிங்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மக்­கள்­தொகை விவ­கா­ரங்­கள் தொடர்­பில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட மாநாட்­டில் அவர் பேசி­யி­ருந்­தார்.

"மனித இனம் நீடிப்­ப­தற்­குக் கட்­டா­ய­மாக நமது மொத்த பிறப்பு விகி­தம் (டிஎ­ஃப்­ஆர்) அதி­க­ரித்து தேசிய தற்­காப்­புக்கு ஈடாக உத்தி­பூர்வ முக்­கி­யத்­து­வம் பெற்­ற­தாக அது கரு­தப்­பட்­டா­லும் எண்­ணங்­களில் அடிப்­படை மாற்­றம் தேவைப்­ப­டு­கிறது. அர­சாங்­கத்­தால் மட்­டு­மல்­லா­மல் தொழில்­துறை, வீடு­கள் போன்­ற­வை­யும் இந்த மாற்­றத்­தில் தீவி­ரம் காட்­ட­வேண்­டும்," என்­றார் அவர்.

குழந்­தைப் பிறப்பு தொடர்­பில் தந்­தை­யர் விடுப்பு அண்­மை­யில் நான்கு வாரங்­க­ளாக இரட்­டிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் குழந்தை பெற்­றுக்­கொள்ள முடி­வெ­டுக்­கும் ஒரு தம்­ப­திக்கு இந்த மாற்­றம் கணி­ச­மாக இல்­லா­மல் போக­லாம் என்­றார் திரு ஹோ.

மாநாட்­டின் தொடக்க உரை நிகழ்த்­திய பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, சிங்­கப்­பூ­ரின் 'டிஎ­ஃப்­ஆர்' வர­லாறு காணாத அள­வுக்கு 2022ல் 1.04க்குச் சரிந்­த­தா­க­வும் முன்­னு­ரைப்­பான 1.05ஐக் காட்­டி­லும் இது குறைவு என்­றும் குறிப்­பிட்­டார்.

குடி­யி­ருப்­பா­ளர் ஊழி­யர் அணி­யின் வளர்ச்­சி­யும் மெது­வடைந்­து­வ­ரு­கிறது. 65 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­கள் 18 விழுக்­காட்­டினர். நிரந்­த­ர­வா­சி­க­ளை­யும் வெளி­நாட்­ட­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சிங்­கப்­பூ­ரின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கை­யில் இதே வய­துடை­யோர் 13 விழுக்­காட்­டி­னர்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரில் நிலை­யற்­ற­தாக இருந்­து­வ­ரும் மிகப் பெரிய வெளி­நாட்டு ஊழி­யர் சமூ­கத்­தி­லி­ருந்து எதிர்­கால நிரந்­த­ர­வா­சி­க­ளை­யும் குடி­மக்­களை­யும் தேர்ந்­தெ­டுக்­க­லாம்.

குறிப்­பிட்ட தயார்­ப­டுத்­தும் ஒரு திட்­டத்­தின் மூலம் சிங்­கப்­பூ­ரில் பல ஆண்­டு­க­ளாக அதி­கச் செயல்­தி­றத்­து­டன் விளங்­கி­வ­ரு­வோரை இவ்­வாறு தேர்ந்­தெ­டுக்­கலாம் என்று திரு ஹோ ஆலோ­சனை கூறி­னார்.

பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் உத்தி­பூர்­வக் குழு­மத்­தின் தேசிய மக்­கள்­தொகை, திற­னா­ளர் பிரிவை மேற்­பார்­வை­யி­டும் திரு­வாட்டி இந்­தி­ராணி, நாட்­டின் முது­மை­யடை­யும் சமூ­கத்­தை­யும் குறை­வான பிறப்பு விகி­தத்­தை­யும் சமா­ளிக்க அர­சாங்­கம் குறிப்­பாக இரு உத்­தி­க­ளைக் கையாள்­கிறது என்­றார்.

குழந்­தைப் பரா­ம­ரிப்பு தொடர்­பில் கூடு­தல் உதவி வழங்­கும் வழி­களை அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­து­டன் மேலும் அதி­க­மான பாலர் பள்ளி இடங்­க­ளை­யும் தொடர்ந்து உரு­வாக்­கித் தரும் என்­றார் அவர்.

இதற்­காக நிறு­வ­னங்­கள் வேலை உரு­மாற்­றம் தொடர்­பில் தத்­தம் நேரத்­தை­யும் முயற்­சி­யை­யும் முத­லீடு செய்ய வேண்­டும். வேலை­யில் செல­வி­டும் நேரத்­துக்­குப் பதி­லாக விளை­வு­களில் முத­லா­ளி­கள் கவ­னம் செலுத்­த­வேண்­டும்.

முதுமை என்­பது நீண்ட ஆயு­ளு­டன் தொடர்­பு­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, பரா­ம­ரிப்­புச் செல­வு­கள் ஆகி­ய­வற்­றைக் காட்­டி­லும் முது­மை­யால் விளை­யும் பலன்­களை எண்­ணிப் பார்க்­க­வேண்­டும் என்­றார் அமைச்­சர் இந்­தி­ராணி.