தாதிமை இல்ல சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நன்றி நவின்ற நிகழ்வு

2 mins read
a037bfa2-e4f9-4eca-8e38-ea3079e6eef3
-

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரச் சூழல் மீண்­டெ­ழும் நிலை­யில் மருத்­து­வப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் உரி­மை­கள், நலன் ஆகி­ய­வற்­றைக் காக்­கும் முயற்­சி­கள் தொடர்ந்து அம­லாக்­கம் கண்டு வரு­கின்­றன.

ஆனால், அதிக வேலைப் பளு, வேலைக் களைப்பு, சீரில்­லாத வேலை-வாழ்க்கை சம­நிலை ஆகி­யவை தொடர்ந்து ஊழி­யர்­களை உறுத்­தும் சிக்­கல்­கள் என சன்­லவ் பரா­ம­ரிப்பு இல்­லத்­தின் தலை­மைத் திட்ட அதி­காரி திரு ராஜ மோகன் கூறி­னார்.

நேற்­றுக் காலை இடம்­பெற்ற அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பின் தேநீர் உப­ச­ரிப்பு நிகழ்­வில் திரு ராஜ மோகன் உட்­பட கொவிட்-19 சூழ­லில் முன்­னி­லை­யில் இருந்து பணி­பு­ரிந்த தாதிமை இல்­லச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் 50 பேர் கலந்­து­கொண்­ட­னர். #செர்­விங்­எஸ்ஜி முயற்­சி­யின் ஐந்­தா­வது அங்­க­மான இந்­நிகழ்வு, அதி­பர் மாளி­கை­யில் நடந்­தே­றி­யது.

சுற்­றுச்­சூ­ழல் சேவை ஊழி­யர்­கள், பொதுச்­சேவை விநி­யோக ஊழி­யர்­கள், கொவிட்-19 செயல்­பா­டு­க­ளைக் கையாண்ட அதி­கா­ரி­கள், ஆரம்­பக்­கல்வி ஆசி­ரி­யர்­கள் ஆகி­யோரை #செர்­விங்­எஸ்ஜி திட்­டத்தை முன்­னிட்டு முன்­னர் அதி­பர் வர­வேற்­றி­ருந்­தார். நாட்டு நல­னில் முக்­கி­யப் பங்­காற்­றும் அவர்­க­ளின் உழைப்­புக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் இச்­சந்­திப்­பு­கள் இடம்­பெற்­றன.

அண்­மை­யில் மருத்­து­வப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­யைத் தடுக்­கும் முயற்சி­கள் ஆலோ­சிக்­கப்­பட்­டன. முறை­கே­டாக நடந்­து­கொள்­ளும் அவ­ச­ர­கால உதவி தேவைப்­ப­டாத நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யிலி­ருந்து நீக்­கப்­படும் காலம் விரை­வில் வர­லாம்.

இவ்­வ­கை­யில் தொடர்ந்து அர­சாங்­க­மும் ஆத­ரவு அமைப்­பு­களும் மருத்­து­வப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் தேவை­கள் அறிந்து செயல்­ப­டு­வது அவ­சி­யம் என்று திரு ராஜ மோகன் வலி­யுறுத்­தி­னார். மன­நல ஆத­ரவு அவர்­க­ளைத் தேடி­வர வகை­செய்­தல், வருத்­தங்­களை முன்­வைக்க வழி அமைத்­தல் ஆகி­யவை அதி­க­ரிக்­கும் என்­பது அவ­ரின் நம்­பிக்கை.

"சமூ­கத்­தி­னர் மருத்­து­வத் துறை­யின் பல்­வேறு பணி­களுக்கு வெவ்­வேறு அங்­கீ­கா­ரத்தை வழங்கு­கின்­ற­னர். ஆனால், அனைத்­தும் அர்த்­தம் மிகுந்­தவை. அடுத்த தலை­மு­றை­யி­ன­ரான இளை­யர்­களை இத்­துறைக்கு ஈர்ப்­பது அவ­சி­யம். அதற்கு வேலை-வாழ்க்கை சம­நிலை உள்ள சூழ­லும் தேவை," என்­றார் திரு ராஜ மோகன், 62.