ஜப்பானில் 'ஜி7' உச்ச மாநாட்டில் கலந்துகொள்ளும் துணைப் பிரதமர்

1 mins read
bc03c223-07d9-494c-888a-cbed80c662e0
-

துணைப் பிர­த­ம­ரும் நிதி­ய­மைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங், 'ஜி7' நாடு­க­ளின் உச்சநிலை மாநாட்­டில் கலந்­து­கொள்ள ஜப்­பான் சென்­றுள்­ளார்.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை 'ஜி7' நாடுகள் எனப்படும்.

அந்நாடு­க­ளின் நிதி­ய­மைச்­சர்­களும் மத்­திய வங்­கித் தலை­வர்­களும் கலந்­து­கொள்­ளும் மாநாடு ஜப்­பா­னின் நீகதா நக­ரில் நடை­பெ­று­கிறது.

அதில் கவ­னிப்­பா­ள­ரா­கக் கலந்­து­கொள்­ளும்­படி சிங்­கப்­பூ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளதை ஏற்று திரு வோங் சென்று உள்­ளார்.

'ஜி20' நாடு­க­ளின் கூட்­டங்­களில் சிங்­கப்­பூர் கவ­னிப்­பா­ள­ராக அழைக்­கப்­ப­டு­வது வழக்­கம் என்­றா­லும் 'ஜி7' மாநாட்­டிற்கு அழைக்­கப்­ப­டு­வது அரி­தான நிகழ்வு.

நேற்று தொடங்­கிய அந்த மூன்று நாள் உச்­ச­நிலை மாநாட்­டில், ரஷ்ய-உக்­ரே­னி­யப் போர், நிதித்­து­றை­யில் நில­வும் நிச்­ச­ய­மற்­ற­தன்மை ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் உல­கப் பொரு­ளி­ய­லை­யும் விநி­யோ­கச் சங்­கி­லி­க­ளை­யும் வலுப்­ப­டுத்­தும் அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தப்­படும்.

வள­ரும் நாடு­க­ளுக்­கும் வளர்ந்த நாடு­க­ளுக்­கும் இடை­யில் பொரு­ளி­யல், நிதி ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­தும் வழி­கள் குறித்­தும் அதில் கலந்­து­ரை­யா­டப்­படும் என்று வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.

திரு வோங்குடன் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர். இம்மாதப் பிற்பகுதியில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய வருங்காலம் குறித்த 28வது நிக்கேய் கருத்தரங்கில் கலந்துகொள்ள துணைப்பிரதமர் வோங் மீண்டும் ஜப்பான் செல்லவிருக்கிறார்.