தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறுபதைக் கடந்தும் அயராது கல்வியைத் தொடர்ந்த பெண்மணி

2 mins read
56897436-0654-406d-9c6c-c5e2bb80a292
-

கரு­ணா­நிதி துர்கா

திரு­மதி மல்­லிகா தட்­சி­ணா­மூர்த்­திக்கு வயது 62.

வாழ்­நாள் கற்­ற­லின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­த­தா­கக் கூறும் இவர், அண்மையில் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வணி­கச் செயல்­பாடு தொடர்­பான பட்­ட­யக்­கல்­வியை நிறை­வு­செய்­துள்­ளார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரிக் கல்­விப் பய­ணத்­தில் பல சவால்­க­ளைச் சந்­தித்­தா­லும் தனது வயதை அவற்­றுக்­கான ஒரு கார­ண­மாக இவர் ஒரு­போ­தும் கரு­த­வில்லை.

கிட்­டத்­தட்ட 20 ஆண்­டு­களுக்கு முன்­னர் அமெ­ரிக்­கா­வின் ஒக்­ல­ஹோமா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஊட­கத்­து­றையில் பட்டயம் பெற்றார் மல்­லிகா.

ஒன்­பது ஆண்­டு­கள் பெரி­யோர்க்­கான கல்வி நிலை­யத்­தில் பணி­பு­ரிந்த இவர், 2020ல் ஓய்­வு­பெற்­றார்.

பணி­பு­ரிந்த காலத்­தில் அவ்­வப்­போது பயி­ல­ரங்­கு­க­ளுக்­குச் சென்று தனது திற­மை­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் வாய்ப்பு கிடைத்­த­தா­கக் கூறுகிறார் இவர்.

சமூ­கத்­து­டன் தொடர்ந்து இணைந்­தி­ருக்க விரும்­பிய மல்­லிகா, வேலைக் கண்­காட்சி ஒன்­றில் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் வணி­கச் செயல்­பாடு பட்­ட­யக்­கல்­வி­யைப் பற்­றித் தெரிந்­து­கொண்­டார்.

"மீண்­டும் வகுப்­ப­றை­யில் பயில்­வ­தில் பல சவால்­களை எதிர்­கொண்­டேன். இருப்பினும் எனக்கு ஆத­ரவு அளித்­துப் பலர் துணை­நின்­ற­னர்," என்று மல்­லிகா கூறி­னார்.

அவ­ருக்­கும் அவ­ரு­டன் பயின்ற மாண­வர்­க­ளுக்­கும் இடையே வயது இடை­வெளி இருந்­தா­லும் அவ்விளையர்­க­ளு­டன் ஒரு நல்ல பிணைப்பை உரு­வாக்க முடிந்­ததாகக் கூறினார் மல்லிகா.

"இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டம் இருந்து கற்­றுக்­கொள்­வ­தற்­குப் பல அம்­சங்­கள் இருக்­கின்­றன என்­பதை உணர்ந்­தேன்.

"தொழில்­நுட்­பத்தைப் பயன்படுத்துவதில் நான் சந்­தித்த சிக்­கல்­க­ளைக் கையாள்­வ­தற்கு அவர்­கள் உத­வி­னர்.

"மேலும், அவர்­க­ளு­டன் உரை­யா­டி­யது என்னை மாறு­பட்ட முறை­யில் சிந்­திக்­கத் தூண்­டி­யது," என்­றார் மல்­லிகா.

கடந்த ஓராண்­டாக உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் நூல­க­ரா­கப் பணி­பு­ரி­யும் இவர், முழு­நேர வேலை­யு­டன் படிப்­ப­தற்கு நேரம் ஒதுக்­கு­வ­தில் சவால்­க­ளைச் சந்­தித்­தார்.

சற்று மனந்­த­ள­ரும் போதெல்­லாம் குடும்­பத்­தி­னர் தனக்கு உறு­து­ணை­யாக இருந்­த­தா­கக் கூறி­னார் மல்­லிகா.

மேலும், படிப்­ப­தற்கு வயதை ஒரு தடை­யா­கக் கரு­தா­மல் தன்­னைப்­போல் மேலும் பலர் கல்வி கற்க முன்­வ­ரு­வர் என நம்­பு­வ­தா­கக் கூறி­னார்.

கல்வி வாய்ப்­பு­கள் அனைத்து வய­தி­ன­ரை­யும் போய்ச் சேர்­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்­கி­றார் இவர்.