குண்டு துளைக்காத அதிநவீன வாகனம், 'டிரோன்' கண்காணிப்பு காவல்துறை பணித்திட்டக் கருத்தரங்கில் புதிய திறன்கள் அறிமுகம்

2 mins read
cf8097b8-fc1a-4f4c-9628-616182f5e09f
-
multi-img1 of 2

ஆயு­தம் ஏந்­திய அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்­ளும்­போது துப்­பாக்­கிக் குண்­டு­களில் இருந்து காவல்­துறை அதி­கா­ரி­க­ளைப் பாது­காக்­கும் திறன்மிகு கொண்ட புதிய பாது­காப்பு வாக­னம் சிறப்பு செயல்­பாட்­டுத் தள­பத்­தி­யத்­தில் (எஸ்ஓசி) சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

உள்­து­றைக் குழு­வின் அறி­வியல், தொழில்­நுட்ப அமைப்­பும் காவல்­து­றை­யும் இணைந்து இந்த வாக­னத்தை உரு­வாக்­கி­யுள்­ளன.

பாது­காப்பு தொடர்­பான சம்­ப­வங்­களில் அதி­கா­ரி­கள் விரைந்து செயல்­ப­டும்­போது, ​​பாது­காப்பை அதி­க­ரிக்க இந்த வாக­னம் உத­வும் என்று காவல்­துறை திறன் உத்­திப் பிரி­வின் கண்காணிப்பா ளரான ராய் ஷபிக் ஆவ் கூறி­னார்.

"பொதுப் பாது­காப்பு அச்­சு­றுத்­த­லின்­போது, இத­னால் உள்ளே புகுந்து அச்­சு­றுத்­தலை முறி­ய­டிக்க முடி­யும். பொது அறி­விப்பு அமைப்பு, சக்­தி­வாய்ந்த விளக்­கு­கள், அதிந­வீன கேம­ராக்­கள் போன்ற அம்­சங்­க­ளை­யும் இந்த வாக­னம் கொண்­டுள்­ளது," என்­றார் அவர்.

இந்த ​​வாக­னத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­த­லாம் என்­பதை சிறப்பு செயல்­பாட்­டுத் தள­பத்­திய அதி­கா­ரி­கள் நேற்று செய்துகாட்­டினர்.

துப்­பாக்கி ஏந்­தி­ய­வர்­கள் ஒரு வணிக வளா­கத்தை வளைத்து முற்­று­கை­யிட்­ட­னர். பலத்த துப்­பாக்­கிச்சூடு நடந்­த­தால் மற்ற காவல்­துறை பிரி­வு­க­ளால் கட்­ட­டத்­திற்­குள் நுழைய முடி­ய­வில்லை. எஸ்ஓசி அதி­கா­ரி­கள், இந்த வாக­னத்­தைக் கேட­ய­மா­கப் பயன்­ப­டுத்தி கட்­ட­டத்­துக்­குள் நுழைந்து அச்­சு­றுத்­தலை முறி­ய­டித்­த­னர்.

2019க்குப் பிறகு முதல் முறை­யாக நேற்று நேர­டி­யாக நடத்­தப்­பட்ட காவல்­துறை பணித்­திட்ட கருத்­த­ரங்கு, கண்­காட்­சி­யில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இந்த வாகனத்துக்கு முறையான அங்கீகாரம் அளித்தார்.

இந்த ஆண்டு கருத்­த­ரங்­கின் கருப்­பொ­ருள் 'நாட்­டுக்­கான எதிர்­கால-தயார்­நி­லைப் படை', என்­ப­தா­கும். பொது ஒழுங்கு, பாது­காப்பு சம்­ப­வங்­க­ளுக்கு காவல்­துறை­யின் செயல்­பாட்டை மேம்­படுத்து­தல், முன்­னிலை கண்­கா­ணிப்பை மேம்­ப­டுத்­து­தல், சேவை வழங்­கல் - சமூக ஈடு­பாட்டை மேம்­ ப­டுத்­து­தல் ஆகி­ய­வற்­றில் கருத்­தரங்கு கவனம் செலுத்­தி­யது.

சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடந்த கருத்­த­ரங்­கில் இவ்­வாண்டு தொடக்­கத்­தில் செயல்­பாட்­டுக்கு வந்த ஆளில்லா வானூர்­தியை (டிரோன்) எதிர்­கொள்­ளும் தனது திற­னை­யும் காவல்­துறை அறி­முகப்­ப­டுத்­தி­யது. 2020 முதல் ஆளில்லா வானூர்­தியை கண்­காணிக்கும் பல்­வேறு தொழில்­நுட்­பங்­களைக் காவல்­துறை சோதனை செய்து வரு­கிறது.

ஆளில்லா வானூர்தி கண்­டறி­யப்பட்­டால் அதி­கா­ரி­கள் உணர்­கரு­வி­கள் மூலம் அதைக் கண்­டு ­பி­டிப்­பார்­கள். அதே நேரத்­தில், தரை­யில் செயல்­படும் அதி­கா­ரி­கள் அதை இயக்­கு­ப­வர்­களை கண்­டு­பி­டித்து அதன் செயல்­பாட்டை நிறுத்­து­வார்­கள்.

தேவைப்­பட்­டால், அதை விசா­ர­ணைக்­காக கைய­கப்­ப­டுத்­து­வதற்கு முன்­னர், அதி­கா­ரி­கள் அதன் கட்­டுப்­பாட்டு சமிக்ஞையைச் சீர்­கு­லைத்து அதை கீழே கொண்டு வர­லாம்.

காவல்­துறை ஆயு­தங்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட தானி­யங்கி ஆயு­தக் களஞ்­சி­யம், காவல்­துறை சேவை­களை மின்­னி­லக்க மய­மாக்­கு­தல் போன்ற காவல்­து­றை­யின் ஏனைய முயற்­சி­களும் கருத்­த­ரங்கு, கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றன.