கோவனில் மூவருக்கு ஸிக்கா

கோவனில் மூவருக்கு ஸிக்கா

2 mins read
23151df8-fbff-4365-b022-c06abdcf9bf6
-

கோவ­னில் வசிக்­கும் அல்­லது பணி­பு­ரி­யும் மூவ­ர் ஸிக்கா வைர­ஸால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கொசு­வால் பர­வும் வைரஸ் இந்த ஆண்­டில் இங்கு கண்­ட­றி­யப்­பட்­டுள்ள முதல் சம்­ப­வம் இது.

பாதிக்­கப்­பட்ட இரு­வர் வீட்­டில் குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும், மருத்­து­வ­ம­னை­யில் இருப்­ப­வ­ரின் நிலைமை சீராக உள்­ளதாகவும் அவர்­களில் எவ­ரும் கர்ப்­ப­மாக இல்லை என்று சுகா­தார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன. 2022ஆம் ஆண்­டில், இரண்டு ஸிக்கா சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

குறிப்­பாக கோவன் பகு­தி­யில் வேலை செய்­ப­வர்­கள் அல்­லது வசிப்­ப­வர்­கள், ஸிக்கா அறி­கு­றி­க­ளைக்­கொண்ட நோயா­ளி­க­ளி­டம் விழிப்­பு­டன் இருக்­கு­மா­றும், ஸிக்கா பரி­சோதனை செய்­யு­மா­றும் மருத்­து­வர்­களை அமைச்சு எச்­ச­ரித்­துள்ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­கள் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு அவர்­களின் உடல்­நி­லையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­க­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

கோவன் குடி­யி­ருப்­பா­ளர்­கள், குறிப்­பாக கர்ப்­பி­ணிப் பெண்­கள், தங்­கள் உடல்­நி­லையைக் கண்­கா­ணிக்­க­வும் உடல்­நிலை சரி­யில்­லா­மல் இருந்­தால் மருத்­துவ உத­வியை நாட­வும் அறி­வுறுத்­தப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் தங்­க­ளது வசிப்­பி­டம், பணி­யி­டம் குறித்த விவ­ரங்­களை மருத்­து­வர்­க­ளி­டம் தெரி­விக்கவேண்டும்.

ஸிக்கா, பாதிக்­கப்­பட்ட ஏடிஸ் கொசு கடித்­தால் பர­வும் வைரஸ் தொற்று.

"அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் முன்­னெச்­ச­ரிக்கை கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டா­லும், மேலும் பாதிப்­பு­கள் இருக்­கக்­கூடும் என்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது, ஏனெ­னில் பாதிக்­கப்­பட்ட பெரும்­பா­ல­னோ­ருக்கு லேசான அறி­கு­றி­கள் அல்­லது அறி­கு­றி­கள் இல்­லா­மலே இருக்­க­லாம்" என்று அமைச்­சு கூறி­யது.

2016ஆம் ஆண்­டில், சிங்­கப்­பூ­ரில் ஸிக்கா வைர­ஸின் சமூக பர­வலை சுகா­தார அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யது. அதே ஆண்டு, உலக சுகா­தார அமைப்பு ஸிக்கா பர­வலை பொது சுகாதார அவ­ச­ர­நி­லை­யாக அறி­வித்­தது.

காய்ச்­சல், அரிப்பு, உடல்­வலி, தலை­வலி, கண் சிவத்­தல் போன்­றவை இந்த வைர­ஸின் அறி­கு­றி­க­ளா­கும். எப்­போ­தா­வது குமட்­டல், வாந்தி போன்­ற­வை­யும் ஏற்­படும்.

பொது­வாக கொசு கடித்த மூன்று முதல் 14 நாள்­க­ளுக்­குள் இக்­காய்ச்­சல் உரு­வா­கும். பெரும்­பா­லும் இரண்டு முதல் ஏழு நாள்­க­ளுக்­குள் நீடிக்­கும். அரி­தாக, ஸிக்கா மைக்­ரோ­செ­பாலி எனும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தும்- கர்ப்பினிகளுக்கு இது ஏற்பட்டால் வயிற்­றில் இருக்­கும் குழந்­தைக்கு தலை சிறி­தா­க­வும், மூளை வளர்ச்­சி­ய­டை­யா­ம­லும் இருக்­கும்.

பாதிக்­கப்­பட்ட ஆண்­கள், குண­ம­டைந்தபின், குறைந்­தது மூன்று மாதங்­க­ளுக்கு பாது­காப்­பான உட­லு­றவு அல்­லது உட­லு­ற­வில் ஈடு­ப­டா­மல் இருக்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர். அதே நேரத்­தில் பெண்­கள் இரண்டு மாதங்­க­ளுக்கு இது அறிவுறுத்தப்படுகிறது.