மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு சென்ற கார்

மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளிவிட்டு சென்ற கார்

1 mins read
cc4cdb64-ea8e-4be0-9d1d-f6dd67ded3bc
-

தெம்­ப­னிஸ் விரை­வுச்­சா­லை­யில் கார் ஒன்று மோதி­யதை அடுத்து மோட்­டார்­சைக்­கி­ளில் சென்ற இரண்டு பேர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

சிலேத்­தார் விரை­வுச் சாலைக்­குச் செல்­லும் வழி­யில் பொங்­கோல் புறச்­சா­லைக்கு முன்­ன­தாக வியா­ழக்­கி­ழமை காலை நேரத்­தில் அந்த விபத்து நிகழ்ந்­தது. காவல்­துறை அது பற்றி புலன்­வி­சா­ரணை நடத்தி வரு­கிறது.

எஸ்ஜி ரோடு விஜி­லாண்டே ன்ற ஃபேஸ்புக் குழு­மத்­தில் அந்த விபத்­தைக் காட்­டும் காணொளி பதி­வேற்­றப்­பட்­டது.

கார் இடித்­ததை அடுத்து மோட்­டார்சைக்­கி­ளில் இருந்து இரண்டு பேரும் தூக்கி எறி­யப்­பட்­ட­தைக் காணொளி காட்டி­யது. விபத்து நிகழ்ந்­த­தும் சம்­பந்­தப்­பட்ட கார் நிற்­கா­மல் வேக­மா­கச் சென்­று­விட்­ட­தை­யும் காணொளி காட்­டி­யது.

இந்த விபத்து பற்றி வியாழக்­கி­ழமை காலை 9 மணிக்குத் தனக்­குத் தெரி­ய­வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அந்த இரு­வ­ரில் 27 வயது ஆட­வர் மோட்­டார்சைக்­கிளை ஓட்டி வந்­தார். 21 வயது பெண் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­தார். காவல்­து­றை­யின் புலன்­விசா­ர­ணை­யில் 31 வயது வாகன ஓட்­டு­நர் ஒரு­வர் உதவி வரு­கி­றார்.