புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் அன்னையர் தினக் கொண்டாட்டம் இம்மாதம் 7ஆம் தேதி இடம்பெற்றது.
புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற குடியிருப்பாளர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த அன்னையர் தின நிகழ்வில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.
புக்கிட் பாஞ்சாங் தனித் தொகுதி நாடாளுமன்ற உறப்பினர் திரு லியாங் எங் ஹுவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
புக்கிட் பாஞ்சாங்கில் பல இன மக்களும் இணைந்து பங்கேற்று அன்னையர் தினத்தில் அன்னையர்களுக்கு வாழ்த்து கூறி அன்பை வெளிப்படுத்தியது மறக்க முடியாதது என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற சீன, மலாய், மியான்மார், தாய்லாந்து போன்ற பலதரப்பட்ட கலை அங்கங்கள் கவர்ந்தன என்று புக்கிட் பாஞ்சாங் சமூக மன்ற குடியிருப்பாளர் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் திரு மூர்த்தி கூறினார்.

