இந்தக் காலகட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பங்கள் அதிகம் ஒருங்கிணைந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் சட்டவிரோதப் பேர்வழிகள் தொழில்நுட்பத்தைத் தங்கள் கெட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சிங்கப்பூரை பாதுகாப்பு மிக்க இடமாக வைத்திருக்க வேண்டும் என்றால் சிங்கப்பூர் அமைப்புகள் வலுவான ஆற்றல் அரண்களை உருவாக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் வலியுறுத்தினார்.
உத்திபூர்வ தகவல்தொடர்பு தொழில்நுட்ப நிலையத்தின் 20வது ஆண்டு விழாவில் பேசிய திரு டியோ, சிங்கப்பூர் பல வகை இணைய உலக மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டும் என்றார்.
சாட்-ஜிபிடி போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படும்போது உண்மையான தகவல்களுக்கும் போலி தகவல்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாத அளவுக்கு அதிநவீன தில்லுமுல்லுகள் இடம்பெறலாம் என்றார் திரு டியோ.
அந்நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் உட்பட 90 பேர் பங்கேற்றனர்.

