எம்ஆர்டி ரயிலில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட இருவர் கைது

எம்ஆர்டி ரயிலில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட இருவர் கைது

1 mins read
b4cc16d3-4076-482d-9481-bac9543ec8b4
-

எம்­ஆர்டி ரயி­லில் சண்­டை­யிட்ட இரண்டு ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

வியா­ழக்­கி­ழமை இரவு ஆர்ச்­சர்ட் எம்­ஆர்டி நிலை­யத்­தில் ரயில் நின்­ற­போது நிகழ்ந்த அந்த கைக­லப்­பைக் காட்­டும் காணொளி மறு­நாள் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது.

கரு­நீல நிறச் சட்டை அணிந்த ஆட­வர் ஒரு­வர் ரயி­லின் தரை­யில் விழுந்த நிலை­யில் மற்­றோர் ஆட­வரை குத்­து­வ­தும் உதைப்­ப­தும் அதில் தெரிந்­தது.

ஒரு கட்­டத்­தில், அந்த இரண்­டாம் ஆட­வர் கரு­நீ­லச் சட்டை ஆட­வ­ரின் கழுத்­தைப் பிடித்­த­தும் அவர் தமது கால்­க­ளால் இரண்­டாம் ஆட­வ­ரின் கழுத்தை பின்­னிக்­கொண்­டார்.

அவ்­வி­ரு­வ­ரின் கால­ணி­களும் பை ஒன்­றும் அருகே சித­றிக் கிடந்­தன. பய­ணி­கள் இரு­வர் சண்­டையை விலக்க முயன்­ற­னர்.

வியா­ழன் இரவு 10.45 மணி­ய­ள­வில் இச்­சம்­ப­வம் குறித்­துத் தனக்­குத் தக­வல் கிடைத்­ததா­க­வும் 33 மற்­றும் 35 வய­து­டைய ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் காவல்­துறை தெரி­வித்­தது.

காவல்­து­றை­யின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­வ­தாக எஸ்­எம்­ஆர்டி கூறி­யது.