பாதுகாக்கப்பட்ட வட்டாரம், பாதுகாக்கப்பட்ட இடம் (பிஏ/பிபி) என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இடம்பெறும் அறிவிப்புப் பலகைகளின் வடிவமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
அது, இன்று முதல் 2028ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி வரைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்.
மாற்றம் இடம்பெறும் காலகட்டத்தில் மக்கள் பழைய, புதிய பலகைகளைப் பார்க்க நேரிடலாம் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
ராணுவ முகாம்கள், குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், உள்கட்டமைப்புச் சட்டத்தின்கீழ் வரும் பிஏ/பிபி என்று அறிவிக்கப்படும்.
பிஏ/பிபி அறிவிப்புப் பலகைகள் இருந்தால் அந்த இடத்திற்குள் அனுமதி பெற்றுத்தான் போக வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தகைய இடங்களில் பாருடைய நடமாட்டமும் செய்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.
இப்போதைய பிஏ/பிபி அறிவிப்புப் பலகைகள் 1998ல் வடிவமைக்கப்பட்டவை.

