மூன்று ஆண்டு துன்புறுத்தப்பட்ட சிறுமி மரணம்; தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டு

மூன்று ஆண்டு துன்புறுத்தப்பட்ட சிறுமி மரணம்; தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
1c764c5f-1e53-4dbd-a147-2c2d0119f22b
-

மூன்று வய­தி­லி­ருந்து தனது மகளை பல்­வேறு வகை­யில் துன்­பு­றுத்தி, தாக்கி, கழி­வ­றை­யில் பல மணி நேரம் நிர்­வா­ண­மாக அடைத்து வைத்­த­தாக 47 வயது தந்­தையை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

2017ஆம் ஆண்­டில் ஐந்து வய­தில் சிறுமி இறக்­கும்­வரை கொடூ­ரச் செயல் தொடர்ந்­தது என்று காவல்துறையினர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே கால­கட்­டத்­தில் இரண்டு வயது முதல் நான்கு வயது வரை­யில் மக­னை­யும் அவர் கொடு­மைப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மொத்­தம் 26 குற்­றச்­சாட்­டு­களை ஆட­வர் எதிர்­நோக்­கு­ கி­றார்.

மக­ளைக் கொன்­ற­தற்­காக மரண தண்­டனை விதிக்­கும் குற்­றச்சாட்­டும் அவர் மீது கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்­கின் விசா­ரணை ஜூலை மாதம் தொடங்­கு­கிறது.

2017இல் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு ஒன்­பது மணி­யி­லி­ருந்து மறு­ந­நாள் விடி­யற்­காலை வரை­யி­லான இடை­ப்பட்ட காலத்­தில் சிறு­மிக்கு அவர் மர­ணம் விளை­வித்­த­தாக குற்­றச்­சாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் சிறுமி எப்­படி இறந்­தார் என்ற விவ­ரம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. உயி­ரோ­டுள்ள மக­னின் அடை­யா­ளம் தெரி­யா­மல் இருப்­ப­தற்­காக ஆட­வ­ரின் பெயரை வெளியிட நீதி­மன்­றம் தடை விதித்தது.