காவல்துறை மேலதிகாரி ஒரு வருக்கு, அவரது கீழ் பணியாற்றிய இரண்டு பெண் அதிகாரிகளை இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மானபங்கப்படுத்தியதற்காக சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
இரு அதிகாரிகளில் ஒருவரிடம் சக ஊழியர்களின் முன்னிலையில் பாலியல் செயலில் ஈடுபட்டு அவர் சிக்கியிருக்கிறார்.
2015க்கும் 2019க்கும் இடையே குற்றச்செயல்களைப் புரிந்த மேலதிகாரி நேற்று தம் மீது சுமத்தப்பட்ட மூன்று மானபங்க குற்றச்சாட்டுகளையும் மற்றொரு அதிகாரியை அவமதித்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும்போது இதர ஏழு குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
மேலதிகாரியின் விவரம், அவரால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிகளின் விவரம் மற்றும் வேலையிட விவரங்கள் வெளியிடப்படவில்லை. பெண் அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடாது என் பதற்காக அவர்களின் அடை யாளங்களை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது.
2017 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் காரில் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது முதல் பெண் அதிகாரியிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார். பெண் அதிகாரியின் மடியில் இருந்த தகவல் பரிமாறும் சாதனத்தை எடுப்பதுபோல அவர் தொடையின் உட்புறத்தைத் தொட்டுள்ளார். இரண்டு முறை இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
2015 அக்டோபர் 25ஆம் தேதி காவல்துறைக்கு வரும் அழைப்புக்கு பதிலளிக்கும்போது இரண்டாவது பெண் அதிகாரியிடம் பாலியல் ரீதியாகவும் அவமதிக்கும்விதமாகவும் அவர் பேசியுள்ளார்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் இருந்தபோது அவர் மானபங்க செயலில் ஈடுபட்டுள்ளார்.
2019 மே 5ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் அக்கம்பக்க காவல் நிலையத்தில் ஆயுதங்களை எடுக்கும்போதும் அவர் பெண் அதிகாரியின் தொடையை தனது இரு கைகளால் பிடித்துள்ளார். இதனை மற்ற அதிகாரி களும் நேரில் பார்த்ததாக நீதி மன்றத்தில் குற்றச்சம்பவங்களை விவரித்த அரசுத் தரப்பு வழக் கறிஞர் சோங் யோங் தெரி வித்தார். குற்றவாளியை $15,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. ஜூன் 6ஆம் தேதி சிறைத் தண்டனையைத் தொடங்க அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

