டிக்டாக் நிறுவனம், உள்ளூர் திறனாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் மூன்று வார இலவச பயிற்சியை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள், டிக்டாக் போன்ற காணொளிகளை உள்ளடக்கிய செயலியை உருவாக்குவது எப்படி என்பதை கற்றுக்கொள்வார்கள்.
டிக்டாக் பொறியாளர் குழு இந்த இலவசப் பயிற்சியை நடத்துகிறது.
பல்கலைக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, இதர கல்வி நிலைய மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
திங்கட்கிழமை தொடங்கிய முதல் பயிற்சி வகுப்பில் இதுவரை 1,300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். திங்கள் முதல் மே 31ஆம் தேதி வரை எட்டு நாள் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

