கோயிலுக்கு வழங்கிய பணத்தை திருப்பிக் கேட்டு வழக்கு

கோயிலுக்கு வழங்கிய பணத்தை திருப்பிக் கேட்டு வழக்கு

1 mins read
14af7d53-b3db-4237-8084-d287ff676ab2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாவோயிசக் கோயிலை அமைக்கவும் நிகழ்ச்சி­களை நடத்­த­வும் ஒரு மில்­லி­யன் வெள்­ளிக்கு மேல் பங்­க­ளித்த அக்­கோ­யி­லின் முன்­னாள் தலை­வர் பணத்தை திருப்­பிக் கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.

2016க்கும் 2018க்கும் இடையே கொடுக்­கப்­பட்ட பணம் கட­னா­கத் தரப்­பட்­டது என்று திரு ரிச்­சர்ட் லிம் சுவீ ஜூ கூறி­யுள்­ளார்.

'நான் பெய் டாவ் மு கோங்' எனும் கோயில் 2016 செப்­டம்பரில் பதிவு செய்­யப்­பட்­டது.

திரு லிம் தற்­போ­தைய கோயில் செய­லா­ள­ரான எரிக் கோ ஜூ ஹெங்கை மற்­றொரு பிர­தி­வா­தி­யா­கக் குறிப்­பிட்­டார்.

கோயிலை அமைத்து நிகழ்ச்­சி­கள் மூலம் அதி­கம் பணம் சம்­பா­திக்­க­லாம் என்று திரு கோ கூறி­ய­தா­க­வும் கோயி­லுக்கு கொடுக்­கப்­பட்ட கடன் பக்­தர்களி­ட­மி­ருந்து திரட்­டப்­படும் நிதி­மூ­லம் திருப்­பிக் கொடுக்­கப்­படும் என்று அவர் கூறி­ய­தா­க­வும் தனது மனு­வில் திரு லிம் தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் இதனை மறுத்­துள்ள பிர­தி­வாதி, அவர் கொடுத்த பணம் கட­னல்ல, நன்­கொ­டை­யா­கக் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்­ளார்.

மே 2ஆம் தேதி­யி­லி­ருந்து இந்த வழக்கு உயர் நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்பட்டு வருகிறது.