தொடர்வெற்றிக்குப் பள்ளிப் பங்களிப்பு

தொடர்வெற்றிக்குப் பள்ளிப் பங்களிப்பு

2 mins read
ce5f331d-64d8-4534-9f91-8243af158f1a
-

அடுத்த 50 முதல் 100 ஆண்­டு­களுக்கு சிங்­கப்­பூர் எப்­படி நீடித்து நிலைத்­தி­டும்? இந்­தப் பய­ணத்­தில் பள்­ளி­க­ளின் பங்கு என்ன? என நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தின் இரு­நூற்­றாண்டு விரி­வு­ரை­யின்­போது கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வந்­தி­ருந்­தோரை நோக்கி வின­வி­னார்.

சிங்­கப்­பூர் மீண்­டும் புதிய, நிச்­ச­ய­மற்ற சூழல்­க­ளை­யும் உச்­சப் பாது­காப்­பின்மை நிலை­யை­யும் எதிர்­நோக்­கு­வ­தாக அவர் சுட்­டி­னார்.

அத­னால், சிங்­கப்­பூர் தொடர்ந்து வெற்­றி­பெ­று­வ­தற்­குப் பள்­ளி­கள் மூன்று முக்­கிய அம்­சங்­களில் பங்­க­ளிக்க வேண்­டும் என்­றார் அவர்.

வாய்ப்­பு­கள் நிறைந்த ஓர் இடம்

சிங்­கப்­பூர் தொடர்ந்து வாய்ப்பு­கள் வழங்­கும் ஓர் இட­மா­கத் திகழ, பள்­ளி­கள் முத­லில் முன்­னோ­டி­க­ளாக இருந்து ஒவ்­வொரு மாண­வ­ரும் தங்­க­ளின் முழு ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தும் ஒரு கல்வி முறையை உரு­வாக்­கப் பங்­க­ளிக்­க­வேண்­டும் என்­றார் அவர்.

ராஃபிள்ஸ் கல்வி நிலை­யம் 1990ல் தன்­னாட்­சிப் பள்­ளி­யாக மாறிய முதல் அர­சுப் பள்ளி என்று தெரி­வித்­தார் திரு சான்.

அந்த மாற்­றத்­தால் புத்­தாக்­கக் கல்­வி­சார் மாதி­ரி­களை முன்­னெடுத்­துச் செல்­லும் ஆற்­ற­லைப் பள்ளி மேலும் வலு­வாக்­கிக்­கொண்­டது என்­றார். தற்­போது ஒவ்­வொரு நிலை­யி­லும் சுமார் 400 மாண­வர்­கள் பயில்­கின்­ற­னர்.

புத்­தாக்­க­மும் ஒத்­து­ழைப்­பும்

கலந்த ஒரு கலா­சா­ரம்

அதி­வி­ரை­வாக மாறி­வ­ரும் சூழ­லில் சிங்­கப்­பூர் புத்­தாக்­க­மும் ஒத்­து­ழைப்­பும் கலந்த ஒரு வலு­வான கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றார் திரு சான்.

"நாளுக்கு நாள் பல­த­ரப்­பட்ட கண்­ணோட்­டங்­கள் அதி­க­ரித்­துக்­கொண்டே வரும் ஓர் உல­கில் நாம் வாழ்­கி­றோம். வெவ்­வேறு கலா­சா­ரங்­க­ளை­யும் பின்­ன­ணி­களை­யும் சேர்ந்­த­வர்­களை இணைக்­கும் கண்­ணோட்­டத்­தை­யும் திற­மை­யை­யும் நம் மக்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்," என்­றார் அவர்.

பள்­ளிப் பாடத்­திட்­டத்­தை­யும் தாண்டி பல­வற்­றைக் கற்­கும் ஆர்­வத்­தைக் கைவிட வேண்­டாம் என அறி­வு­றுத்­தி­னார் அமைச்­சர் சான்.

மற்ற கலா­சா­ரங்­க­ளை­யும் நாடு­க­ளை­யும் ஆழப் புரிந்­து­கொள்ள முயல்­வ­தை­யும் அவர் ஊக்­கு­வித்­தார்.

இதற்­கி­டையே, உலகை நம் மாண­வர்­கள் முன் கொண்­டு­வர வேண்­டும் என்­றும் வட்­டார நாட்­டி­னரை வர­வேற்று அவர்­க­ளி­ட­மிருந்து நாம் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அறை­கூ­வல் விடுத்­தார் அவர்.

சேவை­யாற்­று­வ­தில் வேரூன்­றிய

ஒரு தலை­முறை

சிங்­கப்­பூ­ருக்­குச் சேவை­யாற்­றும் தொலை­நோக்­குப் பார்வை கொண்ட தலை­வர்­களை உரு­வாக்­கு­வ­தில் பள்­ளி­கள் கவ­னம் செலுத்த வேண்­டும்.

மக்­க­ளின் தர­மும் தலை­மைத்­து­வத்­தின் குண­மும் எப்­போ­தும் உச்­சத்­தில் இருக்க வேண்­டும் என்­றார் அவர். சிறிய நாடென்­றா­லும் இத்­த­கைய சிறப்­பு­கள் கொண்ட நாடாக சிங்­கப்­பூர் விளங்க வேண்­டும் என்­றார்.

"நம் பள்­ளி­கள் அனைத்­தும் மாண­வர்­க­ளி­டத்­தில் சேவை புரி­யும் விருப்­பத்தை விதைக்க வேண்­டும். திரும்­பக் கொடுப்­பதை ஊக்­கு­விக்க வேண்­டும். காலத்­திற்கு ஏற்ற தேவை­களை நிறை­வு­செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்­றார் அமைச்­சர் சான்.