நிலப் போக்குவரத்து ஆணையம் மே மாதத் தொடக்கத்தில் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் இரு கார் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார்சைக்கிளோட்டிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோத வாகனப் பகிர்வு சேவை வழங்கும் வாகனமோட்டிகளைக் குறிவைத்து அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் நேற்று அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
இரு கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் இழுத்துச் செல்லப்படுவதைப் புகைப்படங்கள் காட்டின.
"பயணிகளின் சொந்த பாதுகாப்புக்காக, ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல முன்பதிவு செய்ய விரும்புவோர், உரிமம் பெற்ற வர்த்தகத் தளங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்," என்று ஆணையம் குறிப்பிட்டது.

