வீட்டில் பெண்ணை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக டிக்டாக் பிரபலம் மீது குற்றச்சாட்டு

2 mins read
3bcc2aa8-62e6-4448-8bf4-312f159b7b38
-

உள்­ளூர் யூடி­யூப் ஒளி­வ­ழி­யில் முன்­னாள் திரைக்­கதை எழுத்­தாளர்-நடி­க­ரும் டிக்­டாக் பிர­ப­ல­முமான லெவ் பான்­ஃபி­லோவ், 27, (படம்) என்­ப­வர்­மீது டேட்­டிங் செய­லி­யான தின்­ட­ரில் தாம் சந்­தித்த பெண் ஒரு­வ­ரைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

திரைக்­கதை எழு­து­வ­தற்­காக அப்­பெண்ணை பான்­ஃபி­லோவ் தமது வீட்­டிற்கு அழைத்­துச் சென்ற­தைத் தொடர்ந்து, படுக்கை அறை­யில் பாலி­யல் வன்­கொடுமை இடம்­பெற்­றது.

ரஷ்­யா­வைச் சேர்ந்த சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான பான்­ஃபி­லோவ், 2021 ஜன­வரி 12ஆம் தேதி இரவு ரிவர் வேலி கூட்­டு­ரிமை வீட்­டில் குற்­றம் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மூன்று படுக்கை அறை­களைக் கொண்ட அந்த வீட்டை இரு­வ­ரு­டன் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

தம் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை எதிர்த்து பான்­ஃபி­லோவ் முறை­யி­டு­கி­றார். உயர் நீதி­மன்­றத்­தில் 12 நாள்­க­ளுக்கு வழக்கு விசா­ரணை நடை­பெ­றும். வழக்­க­றி­ஞர்­கள் அனில் பால்­சந்­தனி, அஷ்­வின் கண­பதி குற்­றம் சாட்­டப்­பட்­ட­வரை இந்த வழக்­கில் பிர­தி­நி­திக்­கின்­ற­னர்.

குற்­றச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அப்­பெண்ணுக்கு வயது 30. நீதி­மன்ற உத்­த­ரவு கார­ண­மாக அவ­ரது பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

டிக்­டாக்­கில் பான்­ஃபி­லோ­வின் பக்­கத்தை 27,000க்கும் அதி­க­மானோர் பின்­தொ­டர்­கின்­ற­னர். சிங்­கப்­பூர் வாழ்க்கை பற்­றிய நகைச்­சு­வை­யான காணொ­ளி­களை அவர் பதி­வி­டு­கி­றார்.

பான்­ஃபி­லோ­வும் அந்­தப் பெண்­ணும் தின்­ட­ரில் சந்­தித்­த­தாக அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர் ஸ்ருதி போபண்ணா நீதி­மன்­றத்­தில் நேற்று கூறி­னார்.

"பாதிக்­கப்­பட்­ட­வர் அந்­தச் சம­யத்­தில் திரைக்­கதை எழு­திக்­கொண்டு இருந்­த­தால், குற்­றம் ­சாட்­டப்­பட்­ட­வ­ரி­டம் இருந்து அறி­வு­ரை­யும் கருத்­து­களும் பெற முடி­யும் என அவர் நினைத்­தார்," என்று வழக்­க­றி­ஞர் ஸ்ருதி கூறி­னார்.

தின்­ட­ரி­லும் வாட்ஸ்­அப்­பி­லும் குறுஞ்­செய்­தி­க­ளைப் பரி­மா­றிக்­கொண்ட இரு­வ­ரும் ராபர்ட்­சன் கீயில் உள்ள உண­வ­கம் ஒன்­றில் முதன்­மு­றை­யாக நேரில் சந்­தித்­த­னர்.

இரவு உணவு சாப்­பிட்­டுக்­கொண்டு அப்­பெண்­ணின் திரைக்­க­தை­யில் இரு­வ­ரும் பணி­யாற்­றி­னர். உண­வ­கம் மூடும் நேரம் வந்­து­விட்­ட­தால், தமது குடி­யி­ருப்­பில் வேலை­யைத் தொட­ர­லாம் என்று பான்­ஃபிலோவ் பரிந்­து­ரைத்­த­தற்கு அப்­பெண் இணக்கம் தெரி­வித்­தார்.

தமது மடிக்­க­ணி­னியை எடுத்­துக்­கொண்டு பான்­ஃபி­லோ­வு­டன் படுக்­கை­யில் அமர்ந்­தார் அப்­பெண். வெவ்­வேறு நகைச்­சுவை நடி­கர்­க­ளின் யூடி­யூப் காணொ­ளி­க­ளைப் பார்த்த இரு­வ­ரும், நகைச்­சுவை கோட்­பா­டு­கள் குறித்து கலந்­தா­லோ­சித்து அப்­பெண்­ணின் திரைக்­க­தையை எழு­தி­னர்.

சற்று நேரம் கழித்து பான்­ஃபிலோவ் தமது சுய­ரூ­பத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். அப்­பெண்­ணி­டம் வலுக்­கட்­டா­ய­மாக முத்­த­மி­டத் தொங்­கிய அவர், பின்­னர் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­தார்.

வன்­கொ­டுமை நடந்து சில நாள்­க­ளுக்கு தமது அடி­வ­யிற்­றில் வலி ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து அப்­பெண் மருத்­துவ உதவி நாடி­னார்.

காவல்­து­றை­யி­டம் புகார் அளிக்­க­லாமா வேண்­டாமா என்­பது பற்றி அவ­ரால் முடி­வெ­டுக்க முடி­ய­வில்லை.

2021 ஜன­வரி 18ஆம் தேதி அறை­யில் அவர் அழு­து­கொண்டு இருந்­த­தைக் கவ­னித்த அவ­ரின் தாயார் நடந்­தது குறித்து கேட்­ட­றிந்­த­தைத் தொடர்ந்து, அப்­பெண் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தார்.

வழக்கு விசா­ரணை தொடர்­கிறது.