அனுமதியின்றி அறைக்குள் நுழைந்த 11 வயது மகனைக் குத்திய தாய்க்கு 2 மாத சிறை

அனுமதியின்றி அறைக்குள் நுழைந்த 11 வயது மகனைக் குத்திய தாய்க்கு 2 மாத சிறை

2 mins read
0b37765d-1d89-4845-a01c-7947913db217
-

அனு­ம­தி­யின்றி தன் அறைக்­குள் சென்ற மக­னைக் கோபத்­தில் கத்­தி­யால் குத்­திய 41 வயது மாதுக்கு நேற்று இரண்டு மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மாது தமது குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். சிறு­வ­னுக்கு அதிக ரத்­தப்­போக்கு ஏற்­பட்­டது. 20 நாள்கள் மருத்­து­வ­ம­னை­யில் தங்­கிச் சிகிச்சை பெற வேண்­டி­யி­ருந்­தது. சிறு­வ­னின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்­கும் பொருட்டு தாயாரின் பெயர் வெளி­யி­டப்­ப­டவில்லை.

அம்­மாது 1999ல் மற்­றொ­ரு வரை ஆயு­தத்­தால் தாக்­கி­ய­தா­க துணை அரசு வழக்­க­றி­ஞர் எமிலி கோ கூறினார். ஆனால், அந்த வழக்கு பற்­றிய விவ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை.

அம்மாது மித­மான மனச்­சோர்­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். ஆனால், இந்­தப் பாதிப்பு தாம் செய்­வது தவறு என்ற எண்­ணத்தை அவ­ருக்கு உணர்த்­தாமல் இல்லை என்­றார் அவர்.

"குழந்­தை­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைச் செயல்­கள், குறிப்­பாக குடும்ப உற­வின் அமைப்­பிற்­குள் இடம்­பெ­றும்­போது மிக­வும் மோசமானதாக உள்ளது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு இடை­யே­யான நம்­பிக்­கை­யை­யும் பிணைப்­பை­யும் அது சிதைக்­கிறது," என்­றார் அவர்.

சம்­ப­வம் 2021ஆம் ஆண்டு நவம்­பர் 6ஆம் தேதி, பொங்­கோ­லில் உள்ள அடுக்­கு­மாடி வீட்டில் காலை 10 மணி அள­வில் நடந்தது.

சிறு­வன் அவ­னது அம்­மா­வின் அறைக்­குள் அனு­ம­தி­யின்றி நுழைந்து அவர் பயன்­படுத்­தாத கைப்­பே­சியை எடுத்து விளை­யா­டத் தொடங்­கி­னார்.

கோப­ம­டைந்த மாது சமை­ய­ ல­றை­யி­லி­ருந்து பழம் வெட்டும் கத்­தியை எடுத்துக்கொண்டு, அறைக்­குள் சென்­றார். மகன் தன் அறை­யில் மெத்­தை­யில் போர்த்திப் படுத்திருந்ததைப் பார்த்தார். வலது கையால் மக­னின் போர்­வையை இழுத்­த­வாறே, காயப்­ப­டுத்­தும் என்று தெரிந்தே கத்­தியை குத்­து­வ­து­போல் கீழே இறக்­கி­யுள்­ளார். போர்­வை­யைக் கிழித்­துக்கொண்டு கத்தி சிறு­வ­னின் வலது தொடை­யைப் பதம்­பார்த்­தது.

வலி­யில் கத்­திய சிறு­வன் தனது அறைக்கு ஓடி கத­வைச் சாத்­தி­விட்டு, காவல்­து­றையை அழைத்­தான். அவன் கேகே மாதர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டான். நவம்­பர் 25ஆம் தேதி வரை அங்கு சிகிச்சை பெற்­றான்.

சிறு­வன் இன்­னும் குற்­ற­வாளி­யின் பரா­ம­ரிப்­பில் இருக்­கி­ றாரா என்­பதை நீதி­மன்ற ஆவ­ணங்­கள் வெளி­யி­ட­வில்லை.

மாதுக்கு $15,000 பிணை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. சிறைத் ­தண்­ட­னை­யைத் தொடங்க ஜூன் 14ஆம் தேதி அரசு நீதி­மன்­றத்­தில் சர­ண­டையு­மாறு அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.