செங்காங் தீ; மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

செங்காங் தீ; மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

1 mins read
adb1446a-a5c9-4e6f-8d87-9ee9fcabd1c4
-
multi-img1 of 2

செங்­காங் அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் நேற்று காலை ஏற்­பட்ட தீ விபத்­தில் பாதிக்­கப்­பட்ட மூவர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

தீ ஏற்­பட்ட வீட்­டி­லி­ருந்த மூவரை தீய­ணைப்பு வீரர்­கள் மீட்­ட­னர். புகையை சுவா­சித்­த­தால் அவர்­கள் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அக்­கம்­பக்க வீடு­க­ளி­லி­ருந்த மேலும் மூன்று பேர் வெளி­யேற்­றப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை (எஸ்­சி­டி­எஃப்) கூறி­யது.

எஸ்­சி­டி­எஃப் வரு­வ­தற்கு முன்­னரே, அந்த புளோக்­கில் இருந்து கிட்­டத்­தட்ட 50 குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெளி­யே­றி­விட்­ட­னர்.

நான்­கா­வது மாடி­யில் உள்ள அந்த வீட்­டின் வர­வேற்பு அறை­யில் பர­வி­யி­ருந்த தீ தண்­ணீர் மூலம் அணைக்­கப்­பட்­டது என்று எஸ்­சி­டி­எஃப் தெரி­வித்­துள்­ளது.

மின்­னூட்­டம் செய்­யப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த தனி­ந­பர் நட­மாட்ட சாத­னத்­தில் (பிஎம்டி) இருந்து தீ ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக எஸ்­சி­டி­எஃப் கூறி­யது.

மின்­னூட்டச் சாத­னங்­களை நீண்ட நேரம் கவ­னிக்­கா­மல் இருப்­பது அல்­லது இரவு முழு­வ­தும் மின்­னூட்­டம் செய்­வது, அசல் அல்­லாத பேட்­ட­ரி­களை வாங்காமலோ, பயன்படுத்தாமலோ இருப்பது போன்ற பிஎம்டி சாத­னங்­க­ளால் ஏற்­படும் தீயை தவிர்க்­கும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொது­மக்­க­ளுக்கு எஸ்­சி­டி­எஃப் அறிவுறுத்தியது.