அடுத்த ஆண்டு இறுதியில், மின்சார வாகனமோட்டிகள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐந்து நாடுகளில் மின்னூட்டக் கட்டமைப்பை அறி வார்ந்த கைப்பேசி செயலி மூலம் பயன்படுத்தலாம்.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட 'சார்ஜ்+' எனும் நிறுவனம் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் ஆகிய நாடுகளை இணைக்கும் 45 அதிவேக மின்னூட்ட நிலையங்களுக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இவை விரைவுச் சாலைகளிலும் நகரங்களிலும் அமைந்திருக்கும்.
சார்ஜ்+ நிறுவனத்திற்குச் சொந்தமான முதல் 18 இடங்கள் 2024ம் ஆண்டின் இறுதியில் சேவையாற்றத் தொடங்கும்.
இவை சிங்கப்பூர், கோலாலம்பூர், பேங்காக், நோம்பென், ஹோ சி மின், ஹனோய் ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.
மீதமுள்ள 27 இடங்களை சார்ஜ்+ நிறுவனம் அதன் பங்காளிகளுடன் இணைந்து உருவாக்குகிறது. 2025 இறுதியில் அவை தயாராகிவிடும்.
மின்சார வாகன மின்னூட்ட சேவைக்கு கட்டணம் செலுத்த, ஐந்து நாடுகளிலும் உள்ள நிலையங்களில் சார்ஜ்+ கைப்பேசி செயலியை ஓட்டுநர்கள் பயன்படுத்தலாம். இச்செயலி பல்வேறு நாடுகளின் பல்வேறு நாணயங்களைக் கையாளும்.

