பக்கவாத நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க புதிய தொழில்நுட்பம்

2 mins read
c6dab39d-663b-4688-837a-694971938ad6
-

சிங்­கப்­பூ­ரில் 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் கிட்­டத்­தட்ட 4 விழுக்­காட்­டி­னர் பக்­க­வா­தத்­தால் பாதிப்­ப­டை­கின்­ற­னர் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

பக்­க­வா­தத்­தால் பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக சந்­தே­கப்­ப­டு­வோர் காலம் தாம­திக்­கா­மல் பரி­சோ­தனை செய்து சிகிச்­சை­யைத் தொடங்­கா­விட்­டால் மர­ணத்தை விளை­விக்­கும் அள­வுக்கு ஆபத்தை எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர்­கள் பக்­க­வாத நோயா­ளி­க­ளுக்கு விரை­வாக சிகிச்சை அளிக்­கும் முனைப்­பில் 'ராபிட்­ஏஐ' என்­னும் செயற்கை நுண்­ண­றிவு சோத­னைக்­க­ரு­வி­யைத் தற்­போது பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

சிகிச்­சைக்கு 5 நிமி­டங்­கள் தாம­த­மா­னா­லும் அந்­தக் குறு­கிய நேரத்­தில் பக்­க­வாத நோயா­ளி­களின் மூளைத்­தி­சுக்­கள் மின்­னல் வேகத்­தில் அழிக்­கப்­ப­டு­வ­தால் நேரத்தை மிச்­சப்­ப­டுத்­தும் வகை­யில் செயல்­படும் இந்­தப் புதிய சோத­னை­மு­றையை, முதன் முத­லாக தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை மேற்­கொண்­டுள்­ளது. இது­வரை 400க்கும் மேற்­பட்ட பக்­க­வாத நோயா­ளி­க­ளின் சிகிச்­சை­மு­றை­யில் இந்­தத் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

புதிய சோத­னைக் கருவி மூலம் பயன்­க­ளைக் காண முனைப்­பு­டன் இருக்­கி­றார் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் நோய்க்­குறி பட­மெ­டுப்­புப் பிரிவு இடை­யீட்­டுக் கதிர்­வீச்­சி­யல் தலை­வ­ரும் மூத்த நிபு­ண­ரு­மான சார்­பு­நிலை இணைப் பேரா­சி­ரி­யர் அனில் கோபி­நா­தன்.

புதிய சோத­னைக் கரு­வித் திட்­டத்தை வழி­ந­டத்­தும் மருத்­து­வர்­களில் ஒரு­வ­ரான அவர், "விரை­வாக சிகிச்சை அளித்து நோயா­ளி­க­ளின் உயி­ருக்கு ஆபத்து வர­மால் தடுப்­பது ஒரு மருத்­து­வ­ரின் பணி மட்­டு­மின்றி கட­மை­யும்­கூட.

"குறிப்­பாக, பக்­க­வா­தத்தை எடுத்­துக்­கொண்­டால் நேரம் போகப் போக நோயா­ளி­யின் மூளைத்­தி­சுக்­கள் சீக்­கி­ரம் சேத­மடைந்து விடு­கின்­றன.

"புதிய தொழில்­நுட்­பத்­தின் உத­வி­யால் எங்­க­ளால் உட­ன­டி­யாக முடிவு எடுத்து நோயா­ளிக்கு சிறப்­பான சிகிச்­சையை அளிக்க முடி­யும் என்ற நம்­பிக்­கை­யும் கூடு­கிறது.

"இதன் வேறொரு பய­னாக பக்­க­வாத நோயாளி குண­ம் அடைந்து மறு­வாழ்வு அமர்­வு­க­ளுக்­குச் சென்­றா­லும் அவர்­கள் விரை­வில் வீடு திரும்­பி­வி­ட­லாம்," என்­றார்.

பக்­க­வா­தம் ஏற்­பட்­டால் நோயா­ளி­க­ளின் மூளை­யில் இருக்­கும் பெரும்­பான்­மை­யான ரத்­தக் குழாய்­களும் தடுக்­கப்­ப­டு­வ­தால் மூளைத்திசுக்­கள் செய­லி­ழந்து ரத்த ஓட்­டம் தடை­ப­டு­கிறது. ரத்த ஓட்­டத்தை மீண்­டும் சீரான நிலைக்­குக் கொண்டு வர, அறுவை சிகிச்சை மூலம் ரத்த உறைவு அகற்­றப்­படும்.

பட­மெ­டுப்பு நுட்­பம் வழி நோயாளி சிகிச்­சைக்­குத் தகுதி பெற்­றுள்­ளாரா என்­பது தீர்­மா­னிக்­கப்­படும். அதன்மூலம் கிடைக்­கும் தரவை 'ராபிட்­ஏஐ' என்­ற­ழைக்­கப்­படும் இந்த சோத­னைக்­க­ருவி ஒரு நிமி­டத்­திற்­குள் தயார் செய்து மருத்­து­வர்­க­ளுக்­குத் தேவைப்­படும் படங்­களை உரு­வாக்க முற்­படும்.

படங்­களை வைத்து மருத்­து­வர்­க­ளால் எளி­தில் சிகிச்சை சார்ந்த முடி­வு­களை எடுக்­க­வும் சாமர்த்­தி­ய­மாக நேரத்­தைத் திட்­ட­மி­ட­வும் முடி­யும்.

அனுஷா செல்வமணி

கி.ஜனார்த்தனன்