தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்தாண்டு மரபுடைமைத் திட்டம் அறிமுகம்

2 mins read
8d0923d1-c17d-4aa7-94d6-29a42b73ce60
-

காத்­தோங் - ஜூ சியாட் வட்­டா­ர­வா­சி­களும் அங்கு செல்­வோ­ரும் அடுத்த ஆண்டு தெரு விழாக்­கள், வழி­காட்­டு­த­லு­டன் கூடிய சுற்­று­லாக்­கள், உரை நிகழ்­வு­கள் போன்­ற­வற்றை எதிர்­பார்க்­க­லாம்.

தேசிய மர­பு­டைமை வாரி­யம் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­திய 'நம் எஸ்ஜி மர­பு­டை­மைத் திட்­டம் 2.0' எனும் ஐந்­தாண்­டுத் திட்­டத்­தின்­கீழ் இடம்­பெற்­றுள்ள 'மர­பு­டை­மைச் செயல்­பாட்டு முனை­கள்' திட்­டம் அதற்கு வழி­வகை செய்­கிறது.

இந்த ஐந்­தாண்­டுத் திட்­ட­மானது 2023ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்­டு­வரை மர­புடைமை, அரும்­பொ­ரு­ள­கத் துறைக்கு வழி­காட்­டி­யா­கச் செயல்­படும்.

அடை­யா­ளம், தொழில், புத்­தாக்­கம், சமூ­கம் ஆகிய நான்கு அங்­கங்­களில் இத்­திட்­டம் அக்­கறை செலுத்­தும்.

இவற்­றில் சமூ­கம் என்ற அங்­கத்­தின்­கீழ் 'மர­பு­டை­மைச் செயல்­பாட்டு முனை­கள்' திட்­டம் இடம்­பெற்­றுள்­ளது.

ஒவ்­வொரு முனை­யும் சமூ­கக் குழுக்­க­ளால் வழி­ந­டத்­தப்­படும்.

சமூக, கலா­சார, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் பெரனாக்கான் அரும்­பொ­ரு­ள­கத்­தில் இந்த மர­பு­டைமை 2.0 திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

சிங்­கப்­பூர் கலை அரும்­பொரு­ள­கம், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம், தேசிய நூலக வாரி­யம், வடி­வ­மைப்பு சிங்­கப்­பூர் மன்­றம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து, நவ­நா­க­ரி­கம், வரை­கலை வடி­வமைப்பு, கட்­ட­டக்­கலை போன்ற பல­த­ரப்­பட்ட வடி­வ­மைப்பு அம்­சங்­களை உள்­ள­டக்­கிய ஒரு தொகுப்பை உரு­வாக்க மர­பு­டைமை வாரி­யம் திட்­ட­மிட்­டு இருக்கிறது.

இவ்­வட்­டார வர­லாறு, அழ­கி­ய­லுக்கு உட்­பட்டு சிங்­கப்­பூ­ரின் அடை­யா­ளத்­தைப் புரிந்­து­கொள்­ள­வும் சிங்­கப்­பூர் வர­லாற்றை, இவ்­வட்­டா­ரத்­துடனும் உல­கத்­துடனும் நம் நாட்­டிற்கு உள்ள தொடர்­பைச் சிறப்­பாக எடுத்­துக்­காட்­ட­வும் அத்­தொ­குப்பு உத­வும் என்று வாரி­யம் தெரி­வித்­தது.

அத்­தொ­குப்பு தொடர்­பான விவ­ரங்­கள் பின்­னொரு நாளில் அறி­விக்­கப்­படும்.

உள்­ளூர் மர­பு­டை­மைத் தொழில்­து­றைக்­கும் கைவி­னைக் கலை­ஞர்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்­கும் வகை­யில், கைவி­னைத்­தி­றம், படைப்­பாற்­ற­லு­டன் கூடிய வட்­டா­ர­மாக ஆர்­மீ­னி­யன் ஸ்தி­ரீட் உரு­மாற்­றம் பெற­வுள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, சிங்­கப்­பூர் கைவி­னைக்­கலை, பாரம்­ப­ரி­யம் தொடர்­பான நிகழ்ச்­சி­கள் அங்கு நடத்­தப்­படும்; தற்­கா­லி­கக் கடை­கள் ஏற்­ப­டுத்­தப்­படும்.

யுனெஸ்கோ புல­னா­காக் கலா­சார மர­பு­டை­மைப் பட்­டி­ய­லுக்­குச் சிங்­கப்­பூர் அடுத்து முன்­மொ­ழி­யப்­படும் அம்­சம் எது என்­பதை அறி­விக்­க­வும் வாரி­யம் திட்­ட­மிட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் உண­வங்­கா­டிக் கலா­சா­ரம் கடந்த 2020 டிசம்­ப­ரில் அப்­பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டது நினை­வு­கூ­ரத்­தக்­கது.