ஸிக்கா: மேலும் இருவர் பாதிப்பு

ஸிக்கா: மேலும் இருவர் பாதிப்பு

1 mins read
99ec0cc1-ea7e-4181-bdb2-e277b56e3443
-

மேலும் இருவரை 'ஸிக்கா' தொற்றியிருப்பதை அடுத்து, சிங்கப்பூரில் இவ்வாண்டு அத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது.

தேசிய சுற்றுப்புற வாரியம் வியாழக்கிழமை இரவு ஃபேஸ்புக் வழியாக இத்தகவலை வெளியிட்டது.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் நால்­வர் கோவன் வட்­டா­ரத்­தில் வசிப்­ப­வர்­கள் அல்­லது வேலை செய்­ப­வர்­கள். இன்­னொ­ரு­வர் எந்த வட்­டா­ரத்­தைச் சேர்ந்­த­வர் என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

'ஏடிஸ்' கொசுக்­கள் மூலம் 'ஸிக்கா' தொற்று பர­வு­கிறது. இவ்­வ­கைக் கொசுக்­களே டெங்கி, சிக்­குன்­குன்யா தொற்­று­க­ளுக்­கும் கார­ணம் என்­பது குறிப்­பிடத்­தக்­கது.

'ஸிக்கா' தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரி­டம் மூன்று முதல் 14 நாள்­க­ளுக்­குக் காய்ச்­சல், சொறி, மூட்­டு­வலி உள்­ளிட்ட அறி­கு­றி­கள் காணப்­ப­ட­லாம். ஆயி­னும், பெரும்­பா­லான 'ஸிக்கா' நோயா­ளி­க­ளி­டம் எந்த அறி­கு­றி­களும் காணப்­ப­டு­வ­தில்லை.

கடந்த 2020 மார்ச்­சில் இருந்து சிங்­கப்­பூ­ரில் எவ­ரை­யும் 'ஸிக்கா' தொற்­றாத நிலை­யில், சென்ற ஆண்டு அத­னால் இரு­வர் பாதிக்­கப்­பட்­ட­னர்.