தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மியன்மார் ராணுவத்துக்கு உதவுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'

2 mins read
5f38b720-5f2b-4372-9cf4-3ae81b7a8d92
-

மியன்­மார் ராணு­வத்­துக்கு சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக்கொண்ட நிறு­வ­னங்­கள் US$254 மில்­லி­யன் (S$342 மில்­லி­யன்) மதிப்­புள்ள பல்­வேறு தள­வா­டங்­களை அனுப்பு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது என்று ஐக்­கிய நாடு­கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு­உள்­ளது.

அது குறித்து கருத்­து­ரைத்த சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர், சட்­டத்­துக்­குப் புறம்­பாக செயல்­படும் தனி­ந­பர் அல்­லது நிறு­வ­னத்­தின் மீது நட­வ­டிக்கை எடுக்க அமைச்சு தயங்­காது என்று தெரி­வித்­தார்.

ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் டாம் ஆண்ட்­ரூஸ் வெளி­யிட்ட அந்த அறிக்­கை­யில், மியன்­மா­ருக்கு பொருள்­கள் அனுப்­பு­வ­தற்கு சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அனு­ம­தி­ய­ளித்­ததா அல்­லது பொருள்­கள் அனுப்­பு­தலில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளதா என்று குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அந்­தப் பொருள்­கள் 2021 பிப்­ர­வரி முதல் 2022 டிசம்­பர் வரை அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த அறிக்­கையை புதன்­கிழமை வெளி­யிட்ட ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யா­ளர் அலு­வ­ல­கம், குறைந்­தது US$1 பில்­லி­யன் (S$1.35 பில்­லி­யன்) மதிப்­பி­லான ஆயு­தங்­கள், ஆயுத உற்­பத்­திக்­கான மூலப் பொருள்­களை, 2021 பிப்­ர­வ­ரி­யில் நிகழ்ந்த ராணுவ ஆக்­கி­ர­மிப்­புக்­குப் பிறகு மியன்மார் இறக்­கு­மதி செய்­துள்­ளது என்று விரி­வாக அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

ரஷ்யா, சீனா, இந்­தியா, தாய்­லாந்து ஆகி­யவை இந்த ஏற்­று­ம­தி­யில் சம்­பந்­தப்­பட்­டுள்­ளன என்று கூறிய அறிக்கை, சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை இங்­கி­ருந்து 138 தனிப்பட்ட விநி­யோ­கிப்­பா­ளர்­களி­ட­மி­ருந்து பொருள்­கள் மியன்­மா­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன என்று குறிப்பிட்டுள்ளது.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 45 நிறு­வ­னங்­க­ளின் விரி­வான விவ­ரங்­கள் சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தி­டம் இவ்­வாண்டு மார்ச்­சில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

அதில் எந்­தெந்த பொருள்­கள் அனுப்­பப்­பட்­டன, அவற்றின் மதிப்பு என்ன, ஆயுதங்களின் விவரங்கள், ஆயுத உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் கொண்­டி­ருந்த பரி­வர்த்­தனை விவ­ரங்­கள் ஆகி­யவை இருந்­தன.

இது குறித்து ஊட­கங்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு நேற்று பதி­ல­ளித்த சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர், ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் சமர்ப்­பித்த தக­வல்­க­ளுக்கு நன்றி கூறு­வ­தா­கத் தெரி­வித்­தார். அந்­தத் தக­வல்­கள் குற்­றங்­கள் தொடர்­பான புல­னாய்­வுக்­குப் பெரி­தும் உத­வி­யாக இருக்­கும் என்­றார்.

ஆயு­த­மற்ற அப்­பாவி மக்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடிய மியன்­மா­ரின் ராணு­வத்­துக்கு உத­வும் எவ்­வித பொருள் ஏற்­று­ம­திக்­கும் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அனு­ம­தி­ய­ளிக்­காது என்­றும் அமைச்சு மேலும் விவ­ரித்­தது.

"மியன்­மா­ருக்கு எதி­ராக ஐ.நா, பொதுச் சபை­யில் கொண்டு

­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக சிங்­கப்­பூர் எப்­போ­தும் செயல்­படும். அதே­வே­ளை­யில், மியன்­மார் மக்­க­ளுக்கு உத­வும் அனைத்துவித மனி­தா­பி­மான முயற்சி­க­ளுக்கும் சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆத­ர­வளிக்­கும்.

"சக ஆசி­யான் நாடு­களு­டன் சேர்ந்து மியன்­மா­ரில் அமை­தியை மீண்­டும் கொண்­டு­வர அனைத்து முயற்­சி­களும் கூட்­டா­கச் செயல்­படுத்­தப்­படும்," என்­றும் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.