கிர்ஸ்டன் ஹான், எம்.ரவி, டிஓசி ஏஷியா ஆகியோருக்கு எதிராக பொஃப்மா திருத்த உத்தரவு

கிர்ஸ்டன் ஹான், எம்.ரவி, டிஓசி ஏஷியா ஆகியோருக்கு எதிராக பொஃப்மா திருத்த உத்தரவு

1 mins read
b4e07489-1744-486e-a9bf-0ea4a724fc55
-

அண்­மை­யில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட தங்­க­ராஜூ சுப்­பை­யா­வின் விசா­ர­ணை­யின்­போது அவ­ருக்கு உரை­பெ­யர்ப்­பாளரோ, வழக்­க­றி­ஞரோ வழங்­கப்­ப­ட­வில்லை, அவர் குற்­ற­மற்­ற­வர் என்று நிரூ­பிக்­கப்­பட்­டார் போன்ற பல்­வேறு பொய்­யான தக­வல்­க­ளைப் பரப்­பி­ய­தற்­காக சிலருக்கு திருத்த உத்­த­ரவை, பொஃப்மா எனும் இணை­ய­வழி பொய்ச் செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­திற்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டம் தொடர்­பான அலு­வ­ல­கம் நேற்று பிறப்­பித்­தது.

இந்த உத்­த­ர­வின்­படி, சமூக ஆர்­வ­லர் கிர்ஸ்­டன் ஹான், வழக்­க­றி­ஞர் எம்.ரவி, டிஜேசி அமைப்பு, டிஓசி ஏஷியா மற்­றும் டிஓசி இணை நிறு­வ­னர் ஆண்ட்ரூ லோ ஆகி­யோர் தங்­கள் ஊட­கப் பதிப்­பு­க­ளுக்­குப் பக்­கத்­தில் திருத்­தத்தை வெளி­யிட வேண்­டும் என்று உள்­துறை அமைச்­சின் அறிக்கை கூறி­யது.

ஒரு கிலோ­வுக்கு மேலான எடை கொண்ட கஞ்­சா­வைக் கடத்திய குற்­றத்­துக்­காக 46 வயது சிங்­கப்­பூ­ர­ரான தங்­க­ராஜூ, ஏப்­ரல் 26ஆம் தேதி தூக்­கி­லி­டப்­பட்­டார்.

இதன் தொடர்­பில் திரு­வாட்டி ஹான், ஏப்­ரல் 19, 22ஆம் தேதி­களில் சமூக ஊட­கத்­தில் கட்­டுரை வெளி­யிட்­டார். திரு ரவி, ஏப்­ரல் 20, 28ஆம் தேதி­களில் இரு ஃபேஸ்புக் பதி­வு­களை வெளி­யிட்­டார். டிஜேசி ஏப்­ரல் 28ஆம் தேதி­யும் திரு லோ ஏப்­ரல் 24ஆம் தேதி­யும் தங்­கள் ஃபேஸ்புக்­கில் பதி­வு­களை வெளி­யிட்­ட­னர்.

இவை அனைத்­தும் பொய்­யான தக­வல்­கள் என உள்­துறை அமைச்சு தெரிவித்தது.