போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக தீவு முழுதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் 145 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 16 வயது இளம் பெண்ணும் அடங்குவார்.
இம்மாதம் 5ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடந்த நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு கிட்டத்தட்ட $354,000 என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று கூறியது.
15 கிராமுக்கு மேற்பட்ட ஹெராயினைக் கடத்தும் ஒருவருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.
இம்மாதம் 8ஆம் தேதி பிடோக் சவுத் அவென்யூ 2ல் உள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையில் 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு இளையர்கள் கைதாகினர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர்.
மே 11 மாலையில், நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஓர் ஹோட்டலில் 22 வயது ஆடவரும் 16 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 19, 24 வயதுகளில் உள்ள இரு ஆடவர்கள் கைதாகினர்.
புலன் விசாரணை தொடர்கிறது.