அமெரிக்கா, சிங்கப்பூர் ராணுவங்களைச் சேர்ந்த சுமார் 650 வீரர்கள் ஹவாயியில் கிட்டத்தட்ட இரண்டு வார கால வருடாந்திர பயிற்சியை வெற்றிகரமான முறையில் நடத்தி முடித்தனர்.
42வது டைகர் பாம் என்ற அந்தப் பயிற்சி மே மாதம் 8ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரை ஷோஃபீல்டு ராணுவ முகாமில் நடந்தது என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
அந்த வருடாந்திர பயிற்சி இரண்டு நாட்டு ராணுவங்கள் ஒத்துழைக்கவும் உத்திகள், தொழில்நுட்பங்கள், நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அனுமதித்தது.
அது, இரண்டு ராணுவங்களுக்கு இடையில் நீண்ட நெடுநாள்களாக நிலவி வரும் அணுக்க உறவின் அடையாளமாகத் திகழ்ந்தது என்று அமைச்சு தெரிவித்தது.

