விபத்து: பின்னிருக்கையில் பயணம் செய்த மாது மரணம்

விபத்து: பின்னிருக்கையில் பயணம் செய்த மாது மரணம்

1 mins read
429c65f4-c10b-455a-977c-65e964fb4544
-

சிலேத்­தார் விரை­வுச்சாலை­யில் மோட்­டார் சைக்­கிள் சறுக்­கிக்­கொண்­ட­தில் அதில் பின்னிருக்கை­யில் பய­ணம் செய்த மாது மர­ண­ம­டைந்­தார்.

இந்த விபத்து புக்­கிட் தீமா விரை­வுச்சாலையை நோக்­கிச் செல்­லும் சிலேத்­தார் விரைவுச்சாலை­யில் லென்­டோர் அவென்­யூக்­குச் செல்­லும் வழிக்கு அருகே சனிக்­கி­ழமை காலை நிகழ்ந்­தது.

விபத்து பற்றி தங்­க­ளுக்கு முற்­ப­கல் சுமார் 10.20க்குத் தகவல் கிடைத்­த­தாக காவல்­துறை­யும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் கூறின.

இருவர் மருத்­து­வ­மனைக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். அவர்­களில் சுய­நி­னைவை இழந்த நிலை­யிலிருந்த 36 வயது மாதும் ஒரு­வர். அவர் மருத்­து­வ­ம­னை­யில் இறந்து விட்­ட­தா­கக் கூறிய காவல்­துறை, புலன்­வி­சா­ரணை நடந்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டது.