மின்கலன் தீ விபத்து; 160 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்

மின்கலன் தீ விபத்து; 160 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்

1 mins read
d4e3834b-cc8a-4964-af4f-5fcfa28c2204
-

வெஸ்ட் கோஸ்ட் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு ஒன்­றில் சனிக்­கி­ழமை இர­வில் தீ மூண்டதை அடுத்து 160 பேர் அப்­புறப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தீ 12வது மாடி வீட்­டின் படுக்கை அறை­யில் மூண்­டது.அந்த அறை­யில் மின் சைக்­கி­ளில் பயன்­ப­டுத்­தப்­படும் மின்­க­லன் மின் இணைப்­பில் பொருத்­தப்­பட்டு மின்­சா­ரம் ஏற்­றப்­பட்­டது. அதில் இருந்து தீ மூண்­டி­ருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று தெரி­வித்­தது.

அந்த தீ விபத்து பற்றி சனிக்­கி­ழமை இரவு 11.15 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தா­க­வும் அந்­தப் படை கூறி­யது. தீயை அந்தப் படை அணைத்­தது. யாருக்கும் காயம் இல்லை.

மின்­சைக்­கிளை, தனி­ந­பர் நமாட்ட வாக­னங்­க­ளைப் பயன்­படுத்­து­வோர் மின்­க­லன்­களில் அள­வுக்கு அதிக நேரம் மின்­சாரத்தை ஏற்­றக்கூடாது; அவர்­கள் அசல் மின்க­லன்­களையே பயன்­ப­டுத்த வேண்­டும் என்று தற்­காப்­புப் படை ஆலோ­சனை கூறி உள்­ளது.

தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­ன­ங் கள் தொடர்­பான தீ சம்­ப­வங்­கள் எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் 33.3% குறைந்து 63 ஆக இருந்­தது. பல ஒழுங்கு முறை நட­வ­டிக்­கை­கள் நடப்­புக்கு வந்ததே அதற்­குக் கார­ணம் என்று அந்­தப் படை குறிப்­பிட்­டது.

சம்­ப­வங்­கள் குறைந்து இருந்­தா­லும் இத்­த­கைய தீ சம்­ப­வங்­கள் அதி­கா­ரி­க­ளுக்கு இன்­னமும் பெரும் பிரச்­சி­னை­யா­கவே தொடர்­கின்­றன.

தீ விபத்­து­களில் சம்­பந்­தப்­பட்ட வாக­னங்­களை நட­மாட சிர­மப்­ப­டு­ப­வர்­கள் பயன்­ப­டுத்­து­வது வழக்­கம் என்­பதே இதற்­கான கார­ணம்.